சமீபத்திய

மு.க. ஸ்டாலின் மீது மகிழ்ச்சி தெரிவித்த மு.க. அழகிரி – திமுக கூட்டத்தில் அதிரடி எதிர்பார்ப்பு!

11 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக செயலில் மெதுவாக மீளச்சேரும் அடையாளங்களை முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி காட்டியுள்ளார். தனது தம்பி, முதல்வர் மு.க. ஸ்டாலின் மீது மகிழ்ச்சியையும் பாராட்டையும் தெரிவித்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

வீடியோவில், “திமுக வளர்ச்சிக்காக பெரும் பங்காற்றிய முன்னாள் மேயர் முத்து அவர்களின் சிலையை, என் தம்பி ஸ்டாலின் திறப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அவரை நான் ஒருபோதும் மறக்கமுடியாது,” என கூறியுள்ளார். இதன் மூலம் திமுக அரசியல் வளைகுடாவில் ஏற்பட்டிருந்த பனிப்போர் சற்று கரைகிறதா? என்ற கேள்வி எழுகிறது.

11 ஆண்டுகளுக்குப் பிறகு பழைய பாதையில்?

2014 ஆம் ஆண்டு, முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதி மற்றும் அப்போது பொதுச்செயலாளர் அன்பழகன் ஆகியோர் மு.க. அழகிரியை தென்மண்டல அமைப்புச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கினர். அதன்பிறகு, அவர் திமுக அரசியலில் இருந்து விலகியிருந்தார்.

தற்போது, மதுரையில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளுக்கு முன்னிட்டு அவரது வீடு செல்லும் சாலைகள் புதிதாக மேம்படுத்தப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில், முதல்வர் ஸ்டாலின் நேரில் மு.க. அழகிரியை சந்திக்க வாய்ப்பிருக்கிறதா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஜூன் 1 – திமுக பொதுக்குழு கூட்டம்

49 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில்:

  • 3000 பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்
  • 2026 சட்டமன்றத் தேர்தல் தொடர்பான முக்கிய அறிவிப்புகள், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன
  • அமைச்சர் பி. மூர்த்தி, பி.டி.ஆர், மணிமாறன், கோ. தளபதி உள்ளிட்டோர் பம்பரமாய் ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்

இந்த கூட்டத்தில் மு.க. அழகிரி சிறப்பு அழைப்பாளராக வரவழைக்கப்படுகிறார் என்ற தகவல் அவரது ஆதரவாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Thoonganagaram Admin

Recent Posts

மதுரையில் 45 நாள் அரசுப் பொருட்காட்சி… ஜூன் 14ல் தொடக்கம்!

மதுரை மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில், மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள அரசுப் பொருட்காட்சி–2026 தொடக்க விழா ஜூன் 14ஆம் தேதி…

2 நாட்கள் ago

கோவிலில் VIP கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர் ரமேஷ்

மதுரையில் உலகப் புகழ்பெற்ற Meenakshi Amman Temple கோவிலுக்கு வழிபாட்டிற்காக வந்த தமிழக அமைச்சர் ரமேஷ், எந்தவித அரசியல் பந்தாவும்,…

3 நாட்கள் ago

கூட்டுறவு துறையில் வேலைவாய்ப்புக்கு பயிற்சி

மதுரை திருநகரில் செயல்பட்டு வரும் பாண்டியநாடு கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் 2026–27 கல்வியாண்டிற்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப்…

4 நாட்கள் ago

மீனவர்களுக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம்? அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

தமிழகத்தில் மீன்பிடி தடைகால நிவாரணத் தொகையை தற்போதைய ரூ.8,000-இலிருந்து ரூ.20,000 ஆக உயர்த்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீது…

5 நாட்கள் ago

கள் விற்பனைக்கு தடை ஏன்? நீதிமன்றம் கேள்வி

தமிழகத்தில் கள் விற்பனைக்கு அரசு ஏன் அனுமதி வழங்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ள நிலையில்,…

6 நாட்கள் ago

குடிநீர் முதல் குப்பை வரை நேரடி ஆய்வு களத்தில் புதிய ஆணையர்

மதுரை மாநகராட்சியின் புதிய ஆணையராக அண்மையில் பொறுப்பேற்றுள்ள கௌரவ் குமார் ஐ.ஏ.எஸ்., நகரில் குடிநீர் விநியோகம், திடக்கழிவு மேலாண்மை, சுகாதார…

7 நாட்கள் ago