மதுரை, சித்திரைத் திருவிழாவை சிறப்பாக நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மதுரை மாநகராட்சி மேற்கொள்ளும் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தமிழ்நாடு சட்டப்பேரவையில் உறுதியளித்துள்ளார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில், எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார்,
“மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சார்பில் மாநகராட்சிக்கு ரூ.1 கோடிக்கு மேல் நிலுவை உள்ளதாகவும், அந்த தொகை செலுத்தப்படவில்லை என்றால் திருவிழா ஏற்பாடுகளை செய்ய முடியாது என்று மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார். இது பற்றிய தகவல் அமைச்சருக்கு உள்ளதா?”
என்று கேள்வியெழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:
“சித்திரைத் திருவிழா ஏற்பாடுகள் தொடர்பாக அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.மூர்த்தி மற்றும் பி.கே.சேகர்பாபு நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் வழங்க மாநகராட்சி ஆணையருக்கு தக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. பணம் ஒரு தடையல்ல. விழா முழுமையாக மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் நடத்தப்படும்.”
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய குறிப்புகள்:
மதுரை, வளையங்குளம்:தமிழகத்தில் சில தினங்களாகவே மழை வௌ்ளிப்படியாக பெய்து வருகிறது. கோடை வெயிலை தணிக்கவும், குளிர்ச்சியூட்டவும் இந்த மழை காரணமானாலும்,…
2.75 கோடி பேர் வருகை – வெளிநாட்டினர் கூடுதலாக குவிந்து வருகிறார்கள்! மதுரை:இந்தியாவின் முக்கிய சுற்றுலா நகரங்களில் ஒன்றாக மதுரை…
பல்லாயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் மதுரை டைடல் பார்க் திட்டத்திற்கு உச்சநீதிமன்றம் முத்திரை குத்தியுள்ளது. திட்டத்திற்கெதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு…
இண்டியன் ஓவர்சீஸ் வங்கி (IOB) 2025–26 காலாண்டிற்கு 400 உள்ளூர் வங்கி அதிகாரி (Local Bank Officer) பணியிடங்களை நிரப்ப…
மதுரை / கோவை:இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலை சரிவும் ஏற்றமும் காணப்பட்ட நிலையில்,…
மதுரை மாவட்டத்தின் முக்கியமான விழாவான சித்திரைத் திருவிழா, கடந்த மே 8ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. விழாவின் சிறப்புக்குணமான…