மதுரை, சித்திரைத் திருவிழாவை சிறப்பாக நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மதுரை மாநகராட்சி மேற்கொள்ளும் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தமிழ்நாடு சட்டப்பேரவையில் உறுதியளித்துள்ளார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில், எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார்,
“மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சார்பில் மாநகராட்சிக்கு ரூ.1 கோடிக்கு மேல் நிலுவை உள்ளதாகவும், அந்த தொகை செலுத்தப்படவில்லை என்றால் திருவிழா ஏற்பாடுகளை செய்ய முடியாது என்று மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார். இது பற்றிய தகவல் அமைச்சருக்கு உள்ளதா?”
என்று கேள்வியெழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:
“சித்திரைத் திருவிழா ஏற்பாடுகள் தொடர்பாக அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.மூர்த்தி மற்றும் பி.கே.சேகர்பாபு நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் வழங்க மாநகராட்சி ஆணையருக்கு தக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. பணம் ஒரு தடையல்ல. விழா முழுமையாக மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் நடத்தப்படும்.”
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய குறிப்புகள்:
மதுரையில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி…
பெண்களை அதிகமாக பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில், 14 வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கான ஹெச்பிவி (HPV)…
தமிழகத்தில் இன்று (மார்ச் 3) பிற்பகல் 3:20 மணி முதல் மாலை 6:47 மணி வரை நிகழவுள்ள 2026 ஆம்…
மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. கடந்த…
பிரதமர் நாளை மாலை மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதை முன்னிட்டு, நகரம்…
காவல் துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படாதது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேர்வு முடிவுகளை…