கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ளதாகவும், பாதுகாப்பாகவும் கழிக்க, மதுரை மாநகராட்சி கல்வி துறை சார்பில் செஸ், கேரம், யோகா, ஓவியம், தையல், பசுமை நடைப்பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சி முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாநகராட்சி ஆணையர் சித்ரா எடுத்துச்செல்லும் இந்த திட்டம், கல்வி, விளையாட்டு, சுயமுன்னேற்றம் ஆகிய துறைகளில் மாணவர்களை ஊக்குவிக்கக் கூடியதாக அமையும்.
மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். சிலர் பெற்றோர் இல்லாத நிலையில் தாத்தா-பாட்டி அல்லது சிங்கிள் பெற்றோர் அரவணைப்பில் இருக்கின்றனர். பெற்றோர்கள் வேலைக்குச் சென்றபின், குழந்தைகள் வீடுகளில் தனியாக இருப்பது, தவறான பழக்க வழக்கங்களுக்கோ, பாதைகளுக்கோ இட்டுச் செல்லும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.
“தனியார் பள்ளி மாணவர்களுக்கு பெற்றோர் கண்காணிப்பு மற்றும் பயிற்சிகள் இருக்கின்றன. ஆனால் மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு அவை கிடைப்பதில்லை. இதை மாற்ற இந்த முயற்சி. மாணவர்கள் பாதுகாப்பாகவும் பயனுள்ள முறையிலும் இந்த விடுமுறையை கழிக்கவேண்டும் என்பதற்காக இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.”
இந்த முயற்சி மாணவர்களின் நலனுக்காக நகராட்சி மேற்கொள்ளும் ஒரு முன்னோடியான நடவடிக்கை என பெரிதும் பாராட்டப்படுகிறது.
மதுரையில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி…
பெண்களை அதிகமாக பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில், 14 வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கான ஹெச்பிவி (HPV)…
தமிழகத்தில் இன்று (மார்ச் 3) பிற்பகல் 3:20 மணி முதல் மாலை 6:47 மணி வரை நிகழவுள்ள 2026 ஆம்…
மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. கடந்த…
பிரதமர் நாளை மாலை மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதை முன்னிட்டு, நகரம்…
காவல் துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படாதது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேர்வு முடிவுகளை…