சமீபத்திய

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் பிரம்மோற்சவம் 10 நாட்கள் கொண்டாட்டத்திற்கு உயர் நீதிமன்ற உத்தரவு

மதுரை: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலின் பிரம்மோற்சவம் விழா குறித்த மனுவை உயர்நீதிமன்றம் மதுரை கிளை முடித்து வைத்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜேந்திரன் பொதுநல மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்தார். மனுவில், ராமநாதசுவாமி கோவில் பழமையானதுடன், ஆனி மாதம் 10 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவம் விழா கடந்த ஆண்டுகளில் குறைக்கப்பட்டு 3 நாட்கள் மட்டுமே கொண்டாடப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டது. இதனால் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டது. எனவே, விழாவை பழைய முறையில் 10 நாட்கள் நடத்த உத்தரவிட வேண்டுமென கோரப்பட்டது.

வழக்கு விசாரணைக்கு வந்த போது, கோயில் நிர்வாகம் மற்றும் அரசு தரப்பு, அடுத்த ஆண்டில் பிரம்மோற்சவம் 10 நாட்கள் நடத்தப்படும் என்று தெரிவித்தனர். இதனை ஏற்று, உயர்நீதிமன்ற மதுரை கிளை மனுவை முடித்து வைத்தது.

மேலும், அடுத்த ஆண்டில் பிரம்மோற்சவம் நடத்தப்படுவதற்கான கோயில் நிர்வாகத்தின் அறிக்கை சமர்ப்பிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Thoonganagaram Admin

Recent Posts

கொடியேற்றத்துடன் தொடங்கிய கள்ளழகர் ஆடித் திருவிழா

மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடித் திருவிழா, இன்று (ஜூலை…

19 மணி நேரங்கள் ago

மதுரையில் 2,000 ஆண்டு தாழிப்பானை கண்டுபிடிப்பு

மதுரை மாவட்டம் பேரையூர் வட்டத்திற்குட்பட்ட பாப்பி நாயக்கன்பட்டி–சங்கரலிங்கபுரம் பகுதியில் உள்ள சல்லுப்பன் கரடு அடிவாரத்தில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையானதாகக்…

2 நாட்கள் ago

மதுரையில் ஜூலை 24 விவசாயிகள் குறைதீர் கூட்டம்

மதுரை மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் விவசாயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், மாவட்ட நிர்வாகம் நடத்தும் மாதாந்திர…

4 நாட்கள் ago

மதுரையில் நாளை திட்டமிட்ட மின்தடை

மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின் பாதை பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் நாளை (ஜூலை 18) திட்டமிட்ட மின்தடை…

5 நாட்கள் ago

திண்டுக்கல் வழித்தடம் தவிர்த்து ரயில்கள் இயக்கம்

தமிழகத்தின் சேலம் மற்றும் மதுரை ரயில்வே கோட்டங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட…

6 நாட்கள் ago

அழகர் கோவிலில் ஆடித் திருவிழா ஜூலை 21ல் தொடக்கம்

மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் நடைபெறும் ஆண்டு தோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஆடித்…

7 நாட்கள் ago