சமீபத்திய

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் பிரம்மோற்சவம் 10 நாட்கள் கொண்டாட்டத்திற்கு உயர் நீதிமன்ற உத்தரவு

மதுரை: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலின் பிரம்மோற்சவம் விழா குறித்த மனுவை உயர்நீதிமன்றம் மதுரை கிளை முடித்து வைத்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜேந்திரன் பொதுநல மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்தார். மனுவில், ராமநாதசுவாமி கோவில் பழமையானதுடன், ஆனி மாதம் 10 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவம் விழா கடந்த ஆண்டுகளில் குறைக்கப்பட்டு 3 நாட்கள் மட்டுமே கொண்டாடப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டது. இதனால் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டது. எனவே, விழாவை பழைய முறையில் 10 நாட்கள் நடத்த உத்தரவிட வேண்டுமென கோரப்பட்டது.

வழக்கு விசாரணைக்கு வந்த போது, கோயில் நிர்வாகம் மற்றும் அரசு தரப்பு, அடுத்த ஆண்டில் பிரம்மோற்சவம் 10 நாட்கள் நடத்தப்படும் என்று தெரிவித்தனர். இதனை ஏற்று, உயர்நீதிமன்ற மதுரை கிளை மனுவை முடித்து வைத்தது.

மேலும், அடுத்த ஆண்டில் பிரம்மோற்சவம் நடத்தப்படுவதற்கான கோயில் நிர்வாகத்தின் அறிக்கை சமர்ப்பிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Thoonganagaram Admin

Recent Posts

மதுரை மீனாட்சி கோவிலில் நாளை முதல் சிறப்பு பூஜைகள்!

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் மகா கும்பாபிஷேக விழாவுக்கான பூர்வாங்க பூஜைகள் நாளை தொடங்கி செப்டம்பர் 11…

4 மணி நேரங்கள் ago

இன்று மதுரையில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலம்!

மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள இஸ்கான் ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண பலராமர் திருக்கோவிலில் இன்று, செப்டம்பர் 4, 2026 அன்று,…

1 நாள் ago

ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு தேதி வெளியானது

மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், காப்பாளர்கள் மற்றும்…

3 நாட்கள் ago

கும்பாபிஷேக ஏற்பாடு செப்.11 முதல் மூலவர் தரிசனம் இல்லை!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர், கோவில் நிர்வாகம்செப்டம்பர் 11 முதல் 16 வரை மூலவர் தரிசனம்…

4 நாட்கள் ago

செப்.3 காலை 9.30 மணிக்கு அலங்காநல்லூரில் ஆர்ப்பாட்டம்

ஜல்லிக்கட்டு குறித்து தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா சட்டப்பேரவையில் தெரிவித்த கருத்துகளைக் கண்டித்தும், தவெக அரசைக் கண்டித்தும் செப்டம்பர் 3-ஆம்…

5 நாட்கள் ago

சோலமலை பொறியியல் கல்லூரி (தன்னாட்சி), மதுரை

1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சோலமலை பொறியியல் கல்லூரி, தரமான தொழில்நுட்ப மற்றும் மேலாண்மைக் கல்வியை வழங்குவதுடன், மாணவர்களின் திறன்…

1 வாரம் ago