சமீபத்திய

“மெட்ரோவும், விமான நிலைய சுரங்க பாதையும் எடப்பாடி ஆட்சியிலேயே தொடங்கியது” – ஆர்.பி. உதயகுமார்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே, செல்லம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட வாலாந்தூர், பசுக்காரன்பட்டி, அய்யனார்குளம், விக்கிரமங்கலம் பகுதிகளில் உள்ள அதிமுக வாக்குச் சாவடி பாக முகவர்கள் கலந்தாய்வு கூட்டம் மற்றும் ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.

பின்னர் விக்கிரமங்கலத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது:
“மதுரையை சுற்றி பார்த்த முதல்வர் மு.க. ஸ்டாலின், மதுரையின் வளர்ச்சியை சரியாக கவனிக்கவில்லை. அப்படிச் சுற்றி பார்த்திருந்தால், மெட்ரோ கிடைத்திருக்கும், விமான நிலையத்தின் சுரங்க பாதை கிடைத்திருக்கும், மேம்பாலங்கள் விரைவாக கட்டப்பட்டிருக்கும், கூட்டு குடிநீர் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டிருக்கும். இவை அனைத்தும் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள். அதனால் இப்போது அவற்றின் பணிகள் ஆமை வேகத்தில் நடந்து கொண்டிருக்கின்றன; சில திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டு கிடக்கின்றன.”

“விமான ஓடுதளத்திற்கும் சுரங்க பாதைக்குமான மத்திய அரசின் அனுமதி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெற்றுக்கொடுத்தார். இப்போது உள்ள முதலமைச்சர் அதை நிதியளவில் மறுத்து, திட்டங்களை தாமதப்படுத்தியுள்ளார். இதுவே அரசியல் காழ்ப்புணர்ச்சி,” என்று அவர் விமர்சித்தார்.

“எனவே வளர்ச்சி குறித்து சரியாக கவனித்திருந்தால் மதுரை மக்களுக்கு வளர்ச்சி கிடைத்திருக்கும். ஆனால் இவ்வாறு ஒன்றும் செய்யப்படவில்லை. சென்னையில் இருந்த அண்ணா அறிவாலயத்தை மதுரைக்கு இடமாற்றம் செய்துள்ளனர். இந்த இடமாற்றம் தான் ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமாக பார்க்கப்படுகிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, எடப்பாடி பழனிசாமி மீண்டும் அதிமுக ஆட்சியை மலரச் செய்வார் என்பதை நான் உறுதி செய்கிறேன்,” என்றார்.

செல்லம்பட்டி பகுதியில் விளைந்த நெல்மணிகள் மழை வெள்ளத்தில் சேதமடைந்துள்ளதுஎன்று அவர் குறிப்பிட்டு, “நிவாரணம் வழங்க வேண்டும் என ஏற்கனவே கோரிக்கை வைத்திருந்தோம். விளைந்த பயிர்களை நெல் கொள்முதல் நிலையம் அமைத்து கொள்முதல் செய்ய வேண்டும்; தனியாருக்கு கொடுப்பதால் விவசாயிகளுக்கு ரூ. 400 முதல் 600 வரை நஷ்டம் உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்,” என்றார்.

“கோரிக்கை வைக்கும் போது அதற்கான நடவடிக்கையை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடுத்தார். இப்போது உள்ள முதல்வருக்கு இது தெரியவில்லை. அவர் ரோடு ஷோ போன்று நிகழ்வுகளை நடத்தி இருக்கிறார். பிரதான எதிர்க்கட்சியான நாம் விவசாயிகளைக் காக்கச் சொல்கிறோம். தாலி (தங்கம்) திட்டமும் இந்த அரசு காலத்தில் போய்விட்டது,” எனக் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

“அதிமுக மக்களுக்கு அறிவாலய இடமாற்றம் மட்டுமே இந்த பொதுக்குழு கூட்டத்தின் சாதனையாக உள்ளது,” என்றும் அவர் முடித்தார்.

Thoonganagaram Admin

Recent Posts

மதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன உதவிகள்

மதுரை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் கடந்த மூன்று மாதங்களில் பல்வேறு நலத்திட்டங்கள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு, பார்வையற்றோர் மற்றும் வாய்,…

1 நாள் ago

மதுரையில் அதிநவீன ரோபோடிக் அறுவைசிகிச்சை தொடக்கம்

மதுரையின் மாட்டுத்தாவணி பகுதியில் செயல்பட்டு வரும் மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அடுத்த தலைமுறைக்கான அதிநவீன ரோபோடிக் அறுவைசிகிச்சை அமைப்பு…

2 நாட்கள் ago

சட்ட மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்? ஐகோர்ட் உத்தரவு

மதுரையைச் சேர்ந்த இந்திரன் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், அரசு சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை…

3 நாட்கள் ago

ஆடி பௌர்ணமி விழா இன்று அழகர்கோவிலில் திருத்தேர் ஆண்டுக்கு ஒருமுறை கருப்பசாமி சன்னதி கதவு திறப்பு

மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் நடைபெற்று வரும் அருள்மிகு சுந்தரராஜப் பெருமாள் ஆடித் திருவிழாவின் 9-ஆம் நாள் நிகழ்ச்சிகள் இன்று (29.07.2026)…

4 நாட்கள் ago

இன்று கள்ளழகர் குதிரை வாகனத்தில் எழுந்தருளல்

மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் நடைபெற்று வரும் ஆடித் திருவிழா பக்தர்கள் திரளான பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இன்று (28.07.2026)…

5 நாட்கள் ago

மதுரை, கோவை மெட்ரோவுக்கு மீண்டும் சிவப்பு சிக்னல்

மதுரை, கோவை மெட்ரோ திட்டம் மீண்டும் நிராகரிப்பு சென்னை: மதுரை மற்றும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்தும் அளவுக்கு…

6 நாட்கள் ago