சமீபத்திய

“மெட்ரோவும், விமான நிலைய சுரங்க பாதையும் எடப்பாடி ஆட்சியிலேயே தொடங்கியது” – ஆர்.பி. உதயகுமார்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே, செல்லம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட வாலாந்தூர், பசுக்காரன்பட்டி, அய்யனார்குளம், விக்கிரமங்கலம் பகுதிகளில் உள்ள அதிமுக வாக்குச் சாவடி பாக முகவர்கள் கலந்தாய்வு கூட்டம் மற்றும் ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.

பின்னர் விக்கிரமங்கலத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது:
“மதுரையை சுற்றி பார்த்த முதல்வர் மு.க. ஸ்டாலின், மதுரையின் வளர்ச்சியை சரியாக கவனிக்கவில்லை. அப்படிச் சுற்றி பார்த்திருந்தால், மெட்ரோ கிடைத்திருக்கும், விமான நிலையத்தின் சுரங்க பாதை கிடைத்திருக்கும், மேம்பாலங்கள் விரைவாக கட்டப்பட்டிருக்கும், கூட்டு குடிநீர் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டிருக்கும். இவை அனைத்தும் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள். அதனால் இப்போது அவற்றின் பணிகள் ஆமை வேகத்தில் நடந்து கொண்டிருக்கின்றன; சில திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டு கிடக்கின்றன.”

“விமான ஓடுதளத்திற்கும் சுரங்க பாதைக்குமான மத்திய அரசின் அனுமதி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெற்றுக்கொடுத்தார். இப்போது உள்ள முதலமைச்சர் அதை நிதியளவில் மறுத்து, திட்டங்களை தாமதப்படுத்தியுள்ளார். இதுவே அரசியல் காழ்ப்புணர்ச்சி,” என்று அவர் விமர்சித்தார்.

“எனவே வளர்ச்சி குறித்து சரியாக கவனித்திருந்தால் மதுரை மக்களுக்கு வளர்ச்சி கிடைத்திருக்கும். ஆனால் இவ்வாறு ஒன்றும் செய்யப்படவில்லை. சென்னையில் இருந்த அண்ணா அறிவாலயத்தை மதுரைக்கு இடமாற்றம் செய்துள்ளனர். இந்த இடமாற்றம் தான் ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமாக பார்க்கப்படுகிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, எடப்பாடி பழனிசாமி மீண்டும் அதிமுக ஆட்சியை மலரச் செய்வார் என்பதை நான் உறுதி செய்கிறேன்,” என்றார்.

செல்லம்பட்டி பகுதியில் விளைந்த நெல்மணிகள் மழை வெள்ளத்தில் சேதமடைந்துள்ளதுஎன்று அவர் குறிப்பிட்டு, “நிவாரணம் வழங்க வேண்டும் என ஏற்கனவே கோரிக்கை வைத்திருந்தோம். விளைந்த பயிர்களை நெல் கொள்முதல் நிலையம் அமைத்து கொள்முதல் செய்ய வேண்டும்; தனியாருக்கு கொடுப்பதால் விவசாயிகளுக்கு ரூ. 400 முதல் 600 வரை நஷ்டம் உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்,” என்றார்.

“கோரிக்கை வைக்கும் போது அதற்கான நடவடிக்கையை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடுத்தார். இப்போது உள்ள முதல்வருக்கு இது தெரியவில்லை. அவர் ரோடு ஷோ போன்று நிகழ்வுகளை நடத்தி இருக்கிறார். பிரதான எதிர்க்கட்சியான நாம் விவசாயிகளைக் காக்கச் சொல்கிறோம். தாலி (தங்கம்) திட்டமும் இந்த அரசு காலத்தில் போய்விட்டது,” எனக் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

“அதிமுக மக்களுக்கு அறிவாலய இடமாற்றம் மட்டுமே இந்த பொதுக்குழு கூட்டத்தின் சாதனையாக உள்ளது,” என்றும் அவர் முடித்தார்.

Thoonganagaram Admin

Recent Posts

மதுரையில் 45 நாள் அரசுப் பொருட்காட்சி… ஜூன் 14ல் தொடக்கம்!

மதுரை மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில், மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள அரசுப் பொருட்காட்சி–2026 தொடக்க விழா ஜூன் 14ஆம் தேதி…

2 நாட்கள் ago

கோவிலில் VIP கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர் ரமேஷ்

மதுரையில் உலகப் புகழ்பெற்ற Meenakshi Amman Temple கோவிலுக்கு வழிபாட்டிற்காக வந்த தமிழக அமைச்சர் ரமேஷ், எந்தவித அரசியல் பந்தாவும்,…

3 நாட்கள் ago

கூட்டுறவு துறையில் வேலைவாய்ப்புக்கு பயிற்சி

மதுரை திருநகரில் செயல்பட்டு வரும் பாண்டியநாடு கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் 2026–27 கல்வியாண்டிற்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப்…

4 நாட்கள் ago

மீனவர்களுக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம்? அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

தமிழகத்தில் மீன்பிடி தடைகால நிவாரணத் தொகையை தற்போதைய ரூ.8,000-இலிருந்து ரூ.20,000 ஆக உயர்த்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீது…

5 நாட்கள் ago

கள் விற்பனைக்கு தடை ஏன்? நீதிமன்றம் கேள்வி

தமிழகத்தில் கள் விற்பனைக்கு அரசு ஏன் அனுமதி வழங்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ள நிலையில்,…

6 நாட்கள் ago

குடிநீர் முதல் குப்பை வரை நேரடி ஆய்வு களத்தில் புதிய ஆணையர்

மதுரை மாநகராட்சியின் புதிய ஆணையராக அண்மையில் பொறுப்பேற்றுள்ள கௌரவ் குமார் ஐ.ஏ.எஸ்., நகரில் குடிநீர் விநியோகம், திடக்கழிவு மேலாண்மை, சுகாதார…

7 நாட்கள் ago