அதிமுக மற்றும் தேமுதிக இடையிலான உறவு உறுதியானதும் சுமுகமானதும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அதிமுக-தேமுதிக இடையே உள்ள நல்லுறவை யார் நினைத்தாலும் உடைக்க முடியாது” என்றார்.
மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில், அதிமுக தமிழகத்திற்கு துரோகம் செய்ததாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைக் குறித்து அவர் பதிலளித்தார். “அதிமுக ஆட்சியில் இருந்த போதும், தற்போது எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்களுக்கு எப்போதும் நலன் கருதி செயல்பட்டுள்ளது. ஆனால் திமுகதான் மக்களுக்கு துரோகம் செய்தது” என்றார்.
“முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியிலும், அவரின் மறைவுக்குப் பிறகு எனது ஆட்சியிலும் மக்கள் நலனை குறிவைத்த திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த நான்காண்டுகளாக தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடைபெற்று வருகிறது. தினசரி கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, வழிப்பறி போன்ற குற்றங்கள் அதிகரித்துள்ளன. ஸ்டாலின் மாடல் ஆட்சி என்பது ஒரு துரோகம் போன்றது,” எனக் குற்றம் சாட்டினார்.
திமுக பொதுக்குழுவில் கல்விக் கொள்கை பற்றியும் பேசப்பட்டதாகக் கேட்டதாக குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, “மத்திய அமைச்சரவையில் திமுக 16 ஆண்டுகள் இருந்தபோதும் கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றவே இல்லை. ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது மக்களைப் பற்றியும், மாணவர்களைப் பற்றியும் கவலைப்படவில்லை. இப்போது ஆட்சி இல்லாத நிலையில்தான் திட்டமிட்டு பிறர்மீது பழி சுமத்துகிறார்கள். இதுதான் திமுகவின் நடைமுறை” என்றார்.
மதுரையில் ஒரு கால்வாயை திரைச்சீலையால் மூடியிருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், “இது அவல ஆட்சிக்கு ஒரு சான்று,” என்றார்.
“அதிமுக மற்றும் தேமுதிக இடையே உள்ள உறவு திடமானது. அதை யாராலும் உடைக்க முடியாது,” என அவர் வலியுறுத்தினார்.
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய கட்டமாக, அழகர் கோவில் இருந்து கள்ளழகர் இன்று (ஏப்ரல் 29) மாலை மதுரை நோக்கி…
சித்திரைத் திருவிழாவின் பதினொன்றாம் நாளான இன்று (29.04.2026, புதன்) அதிகாலை 4.00 மணி முதல் 4.30 மணி வரை எழுந்தருளுதலுடன்…
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் சித்திரை திருவிழாவின் பத்தாம் திருநாளில், 28.04.2026 செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் இரவு வரை நடைபெற்ற…
மதுரை நகரில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழாவின் ஐந்தாம் நாள் நிகழ்வுகள் 23 ஏப்ரல் 2026, வியாழக்கிழமை அன்று சிறப்பாக…
மதுரை சித்திரை திருவிழாவின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21, 2026) கோலாகலமாக நடைபெற்றன. காலை மற்றும் இரவு…
சித்திரை திருவிழாவின் இரண்டாம் நாளான ஏப்ரல் 20, 2026 திங்கட்கிழமை, காலை 7 மணியளவில் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளிய இறைவன் நான்கு…