மதுரை மாவட்டத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இலக்காகக் கொண்டு, தமிழக சுற்றுலாத் துறை சார்பில் ஜனவரி 14 மற்றும் 17 ஆகிய இரு நாட்களில் பொங்கல் சுற்றுலா விழா நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு, தமிழ்நாட்டின் பாரம்பரிய பொங்கல் கொண்டாட்டத்தை நேரடியாக அனுபவிக்கும் வகையில் நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன.
ஜனவரி 14-ம் தேதி காலை 8 மணிக்கு மதுரை மாவட்ட சுற்றுலா அலுவலகத்திலிருந்து தனி சிறப்பு பேருந்து மூலம் சுற்றுலா பயணிகள் மதுரை மாவட்டம் சத்திரப்பட்டி கிராமம் அழைத்துச் செல்லப்படுவர்.
அங்கு,
ஆகியவை நடைபெறுகின்றன. இதனுடன், பரதநாட்டியம், கிராமிய கலை நிகழ்ச்சிகள், தமிழக பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் ஆகியனவும் இடம்பெறுகின்றன.
இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக, ஜனவரி 17-ம் தேதி காலை 10 மணியளவில், மதுரை சுற்றுலா அலுவலகத்திலிருந்து அரசு தனி சிறப்பு பேருந்து மூலம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் கிராமத்திற்கு அழைத்துச் செல்லப்படுவர்.
அங்கு, நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான பார்வையாளர் மாடத்தில் அமர்ந்து ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பாதுகாப்புடன் பார்வையிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த இரு நாட்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க விரும்பும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்,
ஆகிய விவரங்களுடன் எண் 1, மேலவெளி வீதி, மதுரை மாவட்ட சுற்றுலா அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
தொடர்பு எண்கள்:
0452-2334757
9176995868
மின்னஞ்சல்:
touristofficemadurai@gmail.com
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.
மதுரையில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி…
பெண்களை அதிகமாக பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில், 14 வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கான ஹெச்பிவி (HPV)…
தமிழகத்தில் இன்று (மார்ச் 3) பிற்பகல் 3:20 மணி முதல் மாலை 6:47 மணி வரை நிகழவுள்ள 2026 ஆம்…
மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. கடந்த…
பிரதமர் நாளை மாலை மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதை முன்னிட்டு, நகரம்…
காவல் துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படாதது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேர்வு முடிவுகளை…