சமீபத்திய

ஜனவரி 14 மற்றும் 17-ல் நடைபெறும் பொங்கல் விழாவிற்கு சுற்றுலா பயணிகளை அழைக்கும் மதுரை

மதுரை மாவட்டத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இலக்காகக் கொண்டு, தமிழக சுற்றுலாத் துறை சார்பில் ஜனவரி 14 மற்றும் 17 ஆகிய இரு நாட்களில் பொங்கல் சுற்றுலா விழா நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு, தமிழ்நாட்டின் பாரம்பரிய பொங்கல் கொண்டாட்டத்தை நேரடியாக அனுபவிக்கும் வகையில் நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன.

முதல் நாள் – ஜனவரி 14

ஜனவரி 14-ம் தேதி காலை 8 மணிக்கு மதுரை மாவட்ட சுற்றுலா அலுவலகத்திலிருந்து தனி சிறப்பு பேருந்து மூலம் சுற்றுலா பயணிகள் மதுரை மாவட்டம் சத்திரப்பட்டி கிராமம் அழைத்துச் செல்லப்படுவர்.

அங்கு,

  • கிராம மக்கள் தமிழர் பாரம்பரிய முறையில் சுற்றுலா பயணிகளை வரவேற்பது
  • மாட்டுவண்டி ஊர்வலம்
  • கிராம மக்களுடன் இணைந்து பொங்கல் வைக்கும் நிகழ்வு
  • சுற்றுலா பயணிகளுக்கு பொங்கல் பரிமாறுதல்

ஆகியவை நடைபெறுகின்றன. இதனுடன், பரதநாட்டியம், கிராமிய கலை நிகழ்ச்சிகள், தமிழக பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் ஆகியனவும் இடம்பெறுகின்றன.

இரண்டாம் நாள் – ஜனவரி 17

இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக, ஜனவரி 17-ம் தேதி காலை 10 மணியளவில், மதுரை சுற்றுலா அலுவலகத்திலிருந்து அரசு தனி சிறப்பு பேருந்து மூலம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் கிராமத்திற்கு அழைத்துச் செல்லப்படுவர்.

அங்கு, நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான பார்வையாளர் மாடத்தில் அமர்ந்து ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பாதுகாப்புடன் பார்வையிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முன்பதிவு மற்றும் தொடர்பு விவரங்கள்

இந்த இரு நாட்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க விரும்பும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்,

  • பெயர்
  • பாஸ்போர்ட் நகல்

ஆகிய விவரங்களுடன் எண் 1, மேலவெளி வீதி, மதுரை மாவட்ட சுற்றுலா அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

தொடர்பு எண்கள்:
0452-2334757
9176995868

மின்னஞ்சல்:
touristofficemadurai@gmail.com

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.

Thoonganagaram Admin

Recent Posts

2026 மதுரை சித்திரை திருவிழா முழு அட்டவணை வெளியீடு

மதுரையில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி…

3 நாட்கள் ago

பெண்களை காக்க மதுரையில் புதிய சுகாதார திட்டம்

பெண்களை அதிகமாக பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில், 14 வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கான ஹெச்பிவி (HPV)…

4 நாட்கள் ago

பக்தர்கள் கவனம் சந்திர கிரகணம் காரணமாக கோயில்கள் இன்று நடை அடைப்பு

தமிழகத்தில் இன்று (மார்ச் 3) பிற்பகல் 3:20 மணி முதல் மாலை 6:47 மணி வரை நிகழவுள்ள 2026 ஆம்…

5 நாட்கள் ago

மாசித் திருவிழா தேரோட்டம் கோலாகலம்

மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. கடந்த…

6 நாட்கள் ago

பிரதமரின் வருகையையொட்டி மதுரையில் நாளை போக்குவரத்து மாற்றம்

பிரதமர் நாளை மாலை மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதை முன்னிட்டு, நகரம்…

1 வாரம் ago

இரண்டரை மாதத்தில் அரசு வேலை இபிஎஸ் உறுதி

காவல் துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படாதது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேர்வு முடிவுகளை…

1 வாரம் ago