மதுரை அழகர்கோயிலில் நடைபெறும் ஆடி பெருந்திருவிழா கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருத்தேரோட்டம் மற்றும் பதினெட்டாம்படி கதவுகள் திறப்பு விழா, ஆகஸ்ட் 9-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.
அன்றைய தினம் காலை 8.40 மணிக்கு திருத்தேரோட்டம் ஆரம்பமாக உள்ளது. அதன் பின்னர் மாலை 6.00 மணிக்கு பதினெட்டாம்படி கதவுகள் திறக்கப்பட்டு, படிபூஜைகள் மற்றும் சந்தனம் சாற்றும் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
திருவிழாவை முன்னிட்டு, கோயிலில் தினமும் அன்ன வாகனம், சிம்ம வாகனம், அனுமான் வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் சுந்தரராஜப் பெருமாள் எழுந்தருளி உள்வளாகத்தில் வலம் வருகிறார். ஏராளமான பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்து பரிவுடன் நைவேத்தியம் செலுத்தி வருகின்றனர்.
ஆகஸ்ட் 9-ஆம் தேதி தேரோட்டத்தை முன்னிட்டு, தேரின் சக்கரங்கள் பரிசோதனை, தேர் கட்டைகளின் அடுக்கு வேலை, வடக்கயிறு மற்றும் வர்ணக் கொடைகள் பொருத்தல் உள்ளிட்ட பல்வேறு வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. முழு தேரமைப்பும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பக்தர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர்.
ஆடி திருவிழாவையொட்டி, மதுரை அழகர்கோயில் முழுவதும் மின்விளக்குகளால் அழகாக அலங்கரிக்கப்பட்டு, கண்கள் பரவும் வகையில் ஜொலித்துக் கொண்டிருக்கிறது.
மதுரையில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி…
பெண்களை அதிகமாக பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில், 14 வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கான ஹெச்பிவி (HPV)…
தமிழகத்தில் இன்று (மார்ச் 3) பிற்பகல் 3:20 மணி முதல் மாலை 6:47 மணி வரை நிகழவுள்ள 2026 ஆம்…
மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. கடந்த…
பிரதமர் நாளை மாலை மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதை முன்னிட்டு, நகரம்…
காவல் துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படாதது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேர்வு முடிவுகளை…