மதுரை அரசு மருத்துவமனையில் ரத்தவங்கி துறையின் தகவலின்படி, மே மற்றும் ஜூன் மாதங்களில் ரத்ததான பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதனிடையே, கல்லூரிகளில் செமஸ்டர் விடுமுறை இருப்பதால் மாணவர்களிடமிருந்து ரத்தம் பெறும் வாய்ப்பு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரத்தவங்கி துறைத்தலைவர் சிந்தா கூறியதாவது:
“2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரையில், 208 ரத்ததான முகாம்கள் நடத்தப்பட்டு 30,047 யூனிட்கள் ரத்தம் பெறப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானவை கல்லூரிகளில் நடத்தப்பட்ட முகாம்களே. தற்போது மட்டுமே 1050 யூனிட் ரத்தம் இருக்கின்றது. ஆனால், மருத்துவமனையில் தினமும் 150 யூனிட் ரத்தம் தேவைப்படுகிறது.”
மருத்துவமனையில் தட்டணுக்கள் மட்டும் பிரித்து பெறும் இயந்திரம் உள்ளது.
தொண்டு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஜவுளிக்கடைகள், சிட்கோ, ஐ.டி. நிறுவனங்கள், ரசிகர் மன்றங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள் மற்றும் நண்பர்கள் குழுக்கள் – யாரும் ரத்ததான முகாம்களுக்கு ஏற்பாடு செய்ய முன்வரலாம்.
முகாம் ஏற்பாடு செய்ய அழைக்க வேண்டிய எண்கள்:
📞 82489 23925
📞 94438 30163
மதுரையில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி…
பெண்களை அதிகமாக பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில், 14 வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கான ஹெச்பிவி (HPV)…
தமிழகத்தில் இன்று (மார்ச் 3) பிற்பகல் 3:20 மணி முதல் மாலை 6:47 மணி வரை நிகழவுள்ள 2026 ஆம்…
மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. கடந்த…
பிரதமர் நாளை மாலை மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதை முன்னிட்டு, நகரம்…
காவல் துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படாதது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேர்வு முடிவுகளை…