தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நடத்திய முதல் மாநில மாநாட்டைத் தொடர்ந்து, இப்போது இரண்டாவது மாநில மாநாடு 2025 ஆகஸ்ட் 25ஆம் தேதி மதுரையில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டை முன்னிட்டு, மதுரை மாவட்ட காவல்துறை, மாநாடு தொடங்கும் மற்றும் முடியும் நேரம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட விவரங்களை கேட்டு கட்சியிடம் விளக்கம் கோரியுள்ளது.
மாநாட்டுக்கான அனுமதியை கோரி தவெக சார்பில், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்திடம் மனு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மாநாட்டுக்கான இடம், மேடையின் அளவு, அந்த இடத்தின் உரிமையாளரின் பெயர் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை போலீசார் எழுப்பியுள்ளனர். மேலும், மாநாட்டில் பங்கேற்க உள்ள ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பிரித்து எண்ணிக்கையையும் தெரிவிக்க கேட்டுள்ளனர்.
தவெக கட்சியின் முதலாவது மாநில மாநாடு, 2024 அக்டோபர் 27ஆம் தேதி, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் நடைபெற்றது. அப்போது கூட, காவல்துறையினர் இதுபோன்ற கேள்விகளை முன்வைத்து, உரிய தகவல்களை பெற்றிருந்தனர். தற்போது மதுரையில் நடைபெறவுள்ள மாநாட்டிலும் அதே போல பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கும் நிலையில், மாநில அரசியல் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
மாநாடு நடைபெறும் இடத்தில் சட்டம்-ஒழுங்கு சீராக இருக்க, போக்குவரத்து பாதிக்கப்படாத வகையில் ஏற்பாடுகள் செய்யும் நோக்கத்திலேயே இவ்வகை விவரங்களை காவல்துறை கேட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தவெக சார்பில் விரைவில் முழுமையான பதில் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடையது:
மாநாட்டுக்கான அறிவிப்பு தவெக தலைவர் விஜய் மூலம் சமீபத்தில் வெளியிடப்பட்டது. கட்சியின் வளர்ச்சிக்கும், எதிர்வரும் தேர்தலுக்கான முன்தயாரிப்புகளுக்குமான அடிப்படை தளமாகவே இந்த மாநாடு அமைந்திருக்கும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மதுரையில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி…
பெண்களை அதிகமாக பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில், 14 வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கான ஹெச்பிவி (HPV)…
தமிழகத்தில் இன்று (மார்ச் 3) பிற்பகல் 3:20 மணி முதல் மாலை 6:47 மணி வரை நிகழவுள்ள 2026 ஆம்…
மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. கடந்த…
பிரதமர் நாளை மாலை மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதை முன்னிட்டு, நகரம்…
காவல் துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படாதது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேர்வு முடிவுகளை…