சமீபத்திய

317 வாகனங்கள் பொது ஏலத்தில் விற்பனை – மதுரை மாநகர போலீசார் அறிவிப்பு

மதுரை துரைநகர் காவல் நிலையத்தின் கீழ் போலீசாரால் கைப்பற்றப்பட்டு, உரிமை கோரப்படாமல் அரசுடைமையாக்கப்பட்ட 317 வாகனங்கள், பொது ஏலத்தில் விற்கப்பட உள்ளன. இதுகுறித்த தகவலை மதுரை மாநகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஏலம் எப்போது, எங்கு?
ஏலம் வரும் ஏப்ரல் 25-ம் தேதி, மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது. ஏலத்தில் கலந்துகொள்ள முன்பதிவு கட்டாயமாகும். ஏலத்துக்கு வர விரும்பும் பொதுமக்கள், ஏப்ரல் 23-ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை, ரொக்கமாக முன்பணத்தை செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்.

ஏலத்திற்கு வர இருக்கும் வாகனங்கள் விபரம்:

  • 305 இருசக்கர வாகனங்கள்
  • 11 மூன்று சக்கர வாகனங்கள்
  • 1 நான்கு சக்கர வாகனம்

மொத்தம் 317 வாகனங்கள் ஏலத்திற்கு வரவிருக்கின்றன.

முன்பணம் விவரம்:

  • இருசக்கர வாகனங்களுக்கு: ₹2,000
  • மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு: ₹5,000

முன்பணம் செலுத்தியவர்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.

வாகன பார்வைக்கு வாய்ப்பு:
ஏலத்திற்கு முன் வாகனங்களை நேரில் பார்வையிட, ஏப்ரல் 22, 23 மற்றும் 24-ஆம் தேதிகளில், மதுரை ஆயுதப்படை மைதானத்தில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

முக்கிய குறிப்பு:
ஏலம் அரசு நியமித்த குழுவின் மேற்பார்வையில் நடைபெறும். ஏலத்தில் வெற்றி பெறும் நபர்கள், ஏல தொகையுடன் அதற்கான ஜி.எஸ்.டி. (GST) தொகையும் செலுத்த வேண்டும்.

மேலும் தகவலுக்கு தொடர்பு கொள்ள:
📞 94981-79176
📞 94981-79294
📞 94981-80494
📞 94981-79211
📞 0452-2336472 / 23330070

Thoonganagaram Admin

Recent Posts

செப்டம்பர் 17 மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்

மதுரை நகரின் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதற்கான திருப்பணிகள்…

12 மணி நேரங்கள் ago

2026 மதுரை சித்திரை திருவிழா முழு அட்டவணை வெளியீடு

மதுரையில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி…

5 நாட்கள் ago

பெண்களை காக்க மதுரையில் புதிய சுகாதார திட்டம்

பெண்களை அதிகமாக பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில், 14 வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கான ஹெச்பிவி (HPV)…

6 நாட்கள் ago

பக்தர்கள் கவனம் சந்திர கிரகணம் காரணமாக கோயில்கள் இன்று நடை அடைப்பு

தமிழகத்தில் இன்று (மார்ச் 3) பிற்பகல் 3:20 மணி முதல் மாலை 6:47 மணி வரை நிகழவுள்ள 2026 ஆம்…

7 நாட்கள் ago

மாசித் திருவிழா தேரோட்டம் கோலாகலம்

மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. கடந்த…

1 வாரம் ago

பிரதமரின் வருகையையொட்டி மதுரையில் நாளை போக்குவரத்து மாற்றம்

பிரதமர் நாளை மாலை மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதை முன்னிட்டு, நகரம்…

1 வாரம் ago