சமீபத்திய

கோடை விடுமுறை சிறப்பு ரயில் சேவை மதுரை – ராஜஸ்தான்

மதுரை – ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் அருகே உள்ள பகத் கீ கோத்தி ரயில் நிலையத்திற்கு கோடை விடுமுறை சிறப்பு ரயில் இயக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது கோடை விடுமுறை கூட்ட நெரிசலை சமாளிக்க செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, மதுரை – பகத் கீ கோத்தி சிறப்பு ரயில் (06067) ஏப்ரல் 21 ஆம் தேதி காலை 10.45 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு, ஏப்ரல் 23 ஆம் தேதி மதியம் 12.30 மணிக்கு பகத் கீ கோத்தி ரயில் நிலையத்திற்கு எட்டும். மறு மார்க்கத்தில், பகத் கீ கோத்தி – மதுரை சிறப்பு ரயில் (06068) ஏப்ரல் 24 ஆம் தேதி அதிகாலை 05.30 மணிக்கு பகத் கீ கோத்தி புறப்பட்டு, ஏப்ரல் 26 ஆம் தேதி காலை 08.30 மணிக்கு மதுரையில் வந்து சேரும்.

இந்த ரயில்கள் திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர், சூலூர்பேட்டை, கூடூர், நெல்லூர், ஓங்கோல், விஜயவாடா, கம்மம், வாரங்கல், பல்ஹார்ஷா, சந்திராபூர், வார்தா, தன்மண்டேல், பட்னேரா, அகோலா, மால்காபூர், புஷாவால், ஜால்கன், நந்துர்பர், உத்னா, அங்கலேஸ்வர், வடோடரா, ஆனந்த், சபர்மதி, மகேசேனா, படண், பில்டி, ராணிவாரா, மார்வார் பின்மால், மட்ரன், ஜலோர், மொகல்சர், சம்தாரி, லுனி ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில் நிறுத்தப்படும்.

இந்த சிறப்பு ரயில்களில் 12 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 குறைந்த கட்டண குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள் மற்றும் 2 சரக்கு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த ரயில்களுக்கு பயணச்சீட்டு முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

Thoonganagaram Admin

Recent Posts

மதுரையில் 45 நாள் அரசுப் பொருட்காட்சி… ஜூன் 14ல் தொடக்கம்!

மதுரை மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில், மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள அரசுப் பொருட்காட்சி–2026 தொடக்க விழா ஜூன் 14ஆம் தேதி…

1 நாள் ago

கோவிலில் VIP கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர் ரமேஷ்

மதுரையில் உலகப் புகழ்பெற்ற Meenakshi Amman Temple கோவிலுக்கு வழிபாட்டிற்காக வந்த தமிழக அமைச்சர் ரமேஷ், எந்தவித அரசியல் பந்தாவும்,…

2 நாட்கள் ago

கூட்டுறவு துறையில் வேலைவாய்ப்புக்கு பயிற்சி

மதுரை திருநகரில் செயல்பட்டு வரும் பாண்டியநாடு கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் 2026–27 கல்வியாண்டிற்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப்…

3 நாட்கள் ago

மீனவர்களுக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம்? அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

தமிழகத்தில் மீன்பிடி தடைகால நிவாரணத் தொகையை தற்போதைய ரூ.8,000-இலிருந்து ரூ.20,000 ஆக உயர்த்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீது…

4 நாட்கள் ago

கள் விற்பனைக்கு தடை ஏன்? நீதிமன்றம் கேள்வி

தமிழகத்தில் கள் விற்பனைக்கு அரசு ஏன் அனுமதி வழங்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ள நிலையில்,…

5 நாட்கள் ago

குடிநீர் முதல் குப்பை வரை நேரடி ஆய்வு களத்தில் புதிய ஆணையர்

மதுரை மாநகராட்சியின் புதிய ஆணையராக அண்மையில் பொறுப்பேற்றுள்ள கௌரவ் குமார் ஐ.ஏ.எஸ்., நகரில் குடிநீர் விநியோகம், திடக்கழிவு மேலாண்மை, சுகாதார…

6 நாட்கள் ago