சமீபத்திய

317 வாகனங்கள் பொது ஏலத்தில் விற்பனை – மதுரை மாநகர போலீசார் அறிவிப்பு

மதுரை துரைநகர் காவல் நிலையத்தின் கீழ் போலீசாரால் கைப்பற்றப்பட்டு, உரிமை கோரப்படாமல் அரசுடைமையாக்கப்பட்ட 317 வாகனங்கள், பொது ஏலத்தில் விற்கப்பட உள்ளன. இதுகுறித்த தகவலை மதுரை மாநகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஏலம் எப்போது, எங்கு?
ஏலம் வரும் ஏப்ரல் 25-ம் தேதி, மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது. ஏலத்தில் கலந்துகொள்ள முன்பதிவு கட்டாயமாகும். ஏலத்துக்கு வர விரும்பும் பொதுமக்கள், ஏப்ரல் 23-ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை, ரொக்கமாக முன்பணத்தை செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்.

ஏலத்திற்கு வர இருக்கும் வாகனங்கள் விபரம்:

  • 305 இருசக்கர வாகனங்கள்
  • 11 மூன்று சக்கர வாகனங்கள்
  • 1 நான்கு சக்கர வாகனம்

மொத்தம் 317 வாகனங்கள் ஏலத்திற்கு வரவிருக்கின்றன.

முன்பணம் விவரம்:

  • இருசக்கர வாகனங்களுக்கு: ₹2,000
  • மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு: ₹5,000

முன்பணம் செலுத்தியவர்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.

வாகன பார்வைக்கு வாய்ப்பு:
ஏலத்திற்கு முன் வாகனங்களை நேரில் பார்வையிட, ஏப்ரல் 22, 23 மற்றும் 24-ஆம் தேதிகளில், மதுரை ஆயுதப்படை மைதானத்தில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

முக்கிய குறிப்பு:
ஏலம் அரசு நியமித்த குழுவின் மேற்பார்வையில் நடைபெறும். ஏலத்தில் வெற்றி பெறும் நபர்கள், ஏல தொகையுடன் அதற்கான ஜி.எஸ்.டி. (GST) தொகையும் செலுத்த வேண்டும்.

மேலும் தகவலுக்கு தொடர்பு கொள்ள:
📞 94981-79176
📞 94981-79294
📞 94981-80494
📞 94981-79211
📞 0452-2336472 / 23330070

Thoonganagaram Admin

Recent Posts

மதுரையில் 45 நாள் அரசுப் பொருட்காட்சி… ஜூன் 14ல் தொடக்கம்!

மதுரை மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில், மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள அரசுப் பொருட்காட்சி–2026 தொடக்க விழா ஜூன் 14ஆம் தேதி…

1 நாள் ago

கோவிலில் VIP கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர் ரமேஷ்

மதுரையில் உலகப் புகழ்பெற்ற Meenakshi Amman Temple கோவிலுக்கு வழிபாட்டிற்காக வந்த தமிழக அமைச்சர் ரமேஷ், எந்தவித அரசியல் பந்தாவும்,…

2 நாட்கள் ago

கூட்டுறவு துறையில் வேலைவாய்ப்புக்கு பயிற்சி

மதுரை திருநகரில் செயல்பட்டு வரும் பாண்டியநாடு கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் 2026–27 கல்வியாண்டிற்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப்…

3 நாட்கள் ago

மீனவர்களுக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம்? அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

தமிழகத்தில் மீன்பிடி தடைகால நிவாரணத் தொகையை தற்போதைய ரூ.8,000-இலிருந்து ரூ.20,000 ஆக உயர்த்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீது…

4 நாட்கள் ago

கள் விற்பனைக்கு தடை ஏன்? நீதிமன்றம் கேள்வி

தமிழகத்தில் கள் விற்பனைக்கு அரசு ஏன் அனுமதி வழங்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ள நிலையில்,…

5 நாட்கள் ago

குடிநீர் முதல் குப்பை வரை நேரடி ஆய்வு களத்தில் புதிய ஆணையர்

மதுரை மாநகராட்சியின் புதிய ஆணையராக அண்மையில் பொறுப்பேற்றுள்ள கௌரவ் குமார் ஐ.ஏ.எஸ்., நகரில் குடிநீர் விநியோகம், திடக்கழிவு மேலாண்மை, சுகாதார…

6 நாட்கள் ago