மதுரை உலகப் புகழ்பெற்ற மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் தெப்பத் திருவிழாவின் கொடியேற்றம் புதன்கிழமை (ஜனவரி 21) நடைபெறுகிறது.
ஆண்டுதோறும் தை மாதம் பௌர்ணமி நாளில் நடைபெறும் தெப்பத் திருவிழா, நிகழாண்டில் ஜனவரி 21ஆம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் காலை 10.05 மணிக்குமேல் 10.29 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற உள்ளது.
இதனைத் தொடர்ந்து, திருவிழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை இரு வேளைகளிலும் மீனாட்சி சுந்தரேசுவரர் பஞ்சமூர்த்திகளுடன் நான்கு சித்திரை வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வுகள்:
முக்கிய தெப்பத் திருவிழா பிப்ரவரி 1ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் அதிகாலை, சுவாமி பிரியாவிடையுடனும் அம்மன் தனியாகவும் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி வண்டியூர் தெப்பக்குளம் முன்புள்ள முக்தீஸ்வரர் கோயிலுக்கு எழுந்தருளுகின்றனர்.
அங்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகளுக்குப் பிறகு, தெப்பக்குளத்தில் அமைக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமியும் அம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். தெப்பம் முற்பகலில் இரண்டு முறையும், இரவில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் ஒரு முறையும் சுற்றி வலம் வரும். பின்னர் நள்ளிரவில் மீண்டும் கோயிலுக்கு எழுந்தருள்வார்கள்.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி தியாகராஜன், கோயில் இணை ஆணையர் நா. சுரேஷ் மற்றும் அறங்காவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம், நாகமலை புதுக்கோட்டை, வாடிப்பட்டி, ஒத்தக்கடை மற்றும் திருமங்கலம் உள்ளிட்ட 5 சார் பதிவாளர் அலுவலகங்களில்…
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நிலவும் கடுமையான வறட்சியால், தேனி, மதுரை,…
மதுரையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2026–27 கல்வியாண்டுக்கான டிப்ளமோ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. 1946-ஆம்…
மதுரை வில்லாபுரம் மலர் சந்தையின் பின்புறத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய (TNHB) குடியிருப்புகள் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி…
மதுரை மாவட்டத்தில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகளை முன்னிட்டு நாளை (ஜூன் 3, 2026) பல்வேறு பகுதிகளில் திட்டமிட்ட மின்தடை…
கோடை விடுமுறை நிறைவடைந்து ஜூன் முதல் வாரத்தில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், சென்னை நோக்கி திரும்பும் பயணிகளின்…