மதுரை உலகப் புகழ்பெற்ற மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் தெப்பத் திருவிழாவின் கொடியேற்றம் புதன்கிழமை (ஜனவரி 21) நடைபெறுகிறது.
ஆண்டுதோறும் தை மாதம் பௌர்ணமி நாளில் நடைபெறும் தெப்பத் திருவிழா, நிகழாண்டில் ஜனவரி 21ஆம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் காலை 10.05 மணிக்குமேல் 10.29 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற உள்ளது.
இதனைத் தொடர்ந்து, திருவிழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை இரு வேளைகளிலும் மீனாட்சி சுந்தரேசுவரர் பஞ்சமூர்த்திகளுடன் நான்கு சித்திரை வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வுகள்:
முக்கிய தெப்பத் திருவிழா பிப்ரவரி 1ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் அதிகாலை, சுவாமி பிரியாவிடையுடனும் அம்மன் தனியாகவும் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி வண்டியூர் தெப்பக்குளம் முன்புள்ள முக்தீஸ்வரர் கோயிலுக்கு எழுந்தருளுகின்றனர்.
அங்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகளுக்குப் பிறகு, தெப்பக்குளத்தில் அமைக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமியும் அம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். தெப்பம் முற்பகலில் இரண்டு முறையும், இரவில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் ஒரு முறையும் சுற்றி வலம் வரும். பின்னர் நள்ளிரவில் மீண்டும் கோயிலுக்கு எழுந்தருள்வார்கள்.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி தியாகராஜன், கோயில் இணை ஆணையர் நா. சுரேஷ் மற்றும் அறங்காவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடித் திருவிழா, இன்று (ஜூலை…
மதுரை மாவட்டம் பேரையூர் வட்டத்திற்குட்பட்ட பாப்பி நாயக்கன்பட்டி–சங்கரலிங்கபுரம் பகுதியில் உள்ள சல்லுப்பன் கரடு அடிவாரத்தில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையானதாகக்…
மதுரை மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் விவசாயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், மாவட்ட நிர்வாகம் நடத்தும் மாதாந்திர…
மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின் பாதை பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் நாளை (ஜூலை 18) திட்டமிட்ட மின்தடை…
தமிழகத்தின் சேலம் மற்றும் மதுரை ரயில்வே கோட்டங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட…
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் நடைபெறும் ஆண்டு தோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஆடித்…