சமீபத்திய

த.வெ.க. மதுரை மாபெரும் மாநாடு – விஜய் ரெடி! மக்கள் ரெடியா?

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதனை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தனது இரண்டாவது மாநில மாநாட்டை மிகுந்த பிரம்மாண்டத்துடன் நடத்த தயாராகி வருகிறது. இம்மாநாடு, வரும் 21-ம் தேதி மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையிலுள்ள எலியார்பத்தி சுங்கச்சாவடி அருகே பாரபத்தி பகுதியில் நடைபெற உள்ளது.

தேதி மாற்றம் – விநாயகர் சதுர்த்தி காரணம்

ஆரம்பத்தில் மாநாடு ஆகஸ்ட் 25-ம் தேதி நடைபெறும் எனத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அதே நாளில் விநாயகர் சதுர்த்தி விழா இருப்பதால், அதனைத் தவிர்த்து 21-ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


மாநாட்டிற்கான பாதுகாப்பு, ஏற்பாடுகள்

த.வெ.க. தலைவர் விஜய், “முன்னதாக யாரும் காணாத அளவுக்கு” இந்த மாநாடு நடைபெற வேண்டும் என ஆலோசனைகள் வழங்கியுள்ளார். அதன் ஒரு பகுதியாக, கடந்த மாதம் 16-ம் தேதி கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் தலைமையில் பூமி பூஜை மற்றும் பந்தக்கால் நிகர்ச்சி நடைபெற்றது. அதே நாளில் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தை சந்தித்து பாதுகாப்பு அனுமதி கோரி மனுவும் அளிக்கப்பட்டது.


506 ஏக்கர் பரப்பளவில் மாநாடு – 20 லட்சம் பேர் எதிர்பார்ப்பு

மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 20 லட்சம் பேர் வருவர் என எதிர்பார்க்கப்படும் நிலையில், 506 ஏக்கர் நிலம் மாநாட்டிற்காக வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. இப்பரப்பளவில் நிலம் செம்மைப்படுத்தும் பணிகள் 20-க்கும் மேற்பட்ட பொக்லைன் எந்திரங்கள் மூலமாக நடைபெற்று வருகிறது. சுமார் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி செய்யின்றனர், அவர்களுக்கான தற்காலிக தங்கும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.


மேடைகள், வசதிகள், பாதுகாப்பு – அனைத்தும் அதிநவீனம்

  • விஜய் நடக்கும் “Rampwalk” மேடை, பாதுகாப்பு தடுப்பு வேலிகள், ஒலி ஒளி கருவிகள் பொருத்துவதற்கான கேலரிகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
  • வருகையாளர்களுக்காக குடிநீர் தொட்டிகள், சிசிடிவி கேமராக்கள், மருத்துவ முகாம், கழிப்பறைகள் என அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
  • 200 ஏக்கர் நிலம் தனியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, பங்கேற்பாளர்களின் வாகனங்களை நிறுத்த பார்க்கிங் வசதியாக உருவாக்கப்பட்டு வருகிறது.

கொடிகம்பமும், கொடி ஏற்றும் விழாவும்

மாநாடு நடைபெறும் திடலில் பிரம்மாண்டமான கொடிகம்பம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. மாநாடன்று த.வெ.க. தலைவர் விஜய் தனது கட்சிக் கொடியினை ஏற்றி வைப்பார் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.


குறிப்பு: த.வெ.க. பொதுச்செயலாளர் என். ஆனந்த், அவ்வப்போது நேரில் வந்து அனைத்து பணிகளையும் தொடர்ந்து கண்காணித்து, ஆலோசனைகள் வழங்கி வருகிறார்.

Thoonganagaram Admin

Recent Posts

2026 மதுரை சித்திரை திருவிழா முழு அட்டவணை வெளியீடு

மதுரையில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி…

3 நாட்கள் ago

பெண்களை காக்க மதுரையில் புதிய சுகாதார திட்டம்

பெண்களை அதிகமாக பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில், 14 வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கான ஹெச்பிவி (HPV)…

4 நாட்கள் ago

பக்தர்கள் கவனம் சந்திர கிரகணம் காரணமாக கோயில்கள் இன்று நடை அடைப்பு

தமிழகத்தில் இன்று (மார்ச் 3) பிற்பகல் 3:20 மணி முதல் மாலை 6:47 மணி வரை நிகழவுள்ள 2026 ஆம்…

5 நாட்கள் ago

மாசித் திருவிழா தேரோட்டம் கோலாகலம்

மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. கடந்த…

6 நாட்கள் ago

பிரதமரின் வருகையையொட்டி மதுரையில் நாளை போக்குவரத்து மாற்றம்

பிரதமர் நாளை மாலை மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதை முன்னிட்டு, நகரம்…

1 வாரம் ago

இரண்டரை மாதத்தில் அரசு வேலை இபிஎஸ் உறுதி

காவல் துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படாதது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேர்வு முடிவுகளை…

1 வாரம் ago