மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெறவுள்ள திருக்கல்யாண விழாவில் பங்கேற்க விரும்பும் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்களுக்காக ரூ.500 மற்றும் ரூ.200 கட்டணச் சீட்டுகளுக்கு ஆன்லைன் முன்பதிவு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கோயில் இணை ஆணையர் திரு. ச. கிருஷ்ணன் அறிவித்துள்ளார
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பக்தர்கள் கீழ்க்கண்ட இணையதளங்களில் ரூ.500 மற்றும் ரூ.200 கட்டணச் சீட்டுகளை முன்பதிவு செய்யலாம்:
முன்பதிவு தொடக்கம்: ஏப்ரல் 29
முடிவு: மே 2, இரவு 9 மணி
🔹 ஒருவருக்கு 2 ரூ.500 சீட்டுகள் அல்லது 3 ரூ.200 சீட்டுகள் மட்டுமே முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படுகிறது.
🔹 ஒரே நபர் இரு வகை சீட்டுகளையும் (₹500 மற்றும் ₹200) ஒரே நேரத்தில் பதிவு செய்ய முடியாது.
🔹 ஒரு கைபேசி எண் மட்டும் ஒவ்வொரு பதிவுக்கும் பயன்படுத்த வேண்டும்.
🔹 பாதுகாப்பு காரணமாக சிறுவர் பங்கேற்பதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், கோயிலின் மேற்கு சித்திரை வீதியில் உள்ள பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில், காலை 10 முதல் மாலை 6 மணி வரை, கோயில் ஊழியர்கள் மூலம் நேரடி முன்பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மொத்தம் கிடைக்கக்கூடிய சீட்டுகளின் எண்ணிக்கையை விட அதிக விண்ணப்பங்கள் வந்தால், குலுக்கல் முறையில் மே 3 ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டு குறுந்தகவல் அனுப்பப்படும்.
சீட்டு பெற்றுக்கொள்வதற்கான நாள்:
மே 4 முதல் மே 6 வரை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, பிர்லா விஷ்ரம் மையத்தில் குறுந்தகவல் காண்பித்து சீட்டு பெறலாம்.
மொய் காணிக்கையை செலுத்த விரும்பும் பக்தர்கள், மேலுள்ள இணையதளங்கள் வழியாக ஆன்லைனில் செலுத்தலாம்.
📌 முக்கிய குறிப்பு: திருக்கல்யாண நாளன்று, கட்டணச் சீட்டுகள் பெற்ற பக்தர்கள் அதிகாலை 5 மணி முதல் 7 மணிக்குள் கோயிலில் வந்து சேர வேண்டும்.
மேலும் தகவலுக்கு:
https://hrce.tn.gov.in
https://maduraimeenakshi.hrce.tn.gov.in
மதுரை: தமிழ்நாட்டின் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தும் பணிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டிருந்தது. இந்தநிலையில்,…
மதுரை: திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெற உள்ள குடமுழுக்கு விழாவின் நேரத்தை நிர்ணயிக்க தொடர்புடைய தரப்புகள் ஆலோசனை செய்து முடிவெடுக்க…
இந்தியாவின் முன்னணி வானூர்தி நிறுவனம் இண்டிகோ, தமிழ்நாட்டின் கலாச்சார மாநகரமான மதுரையிலிருந்து அபுதாபி வரை நேரடி விமான சேவையை ஜூன்…
மதுரை, வளையங்குளம்:தமிழகத்தில் சில தினங்களாகவே மழை வௌ்ளிப்படியாக பெய்து வருகிறது. கோடை வெயிலை தணிக்கவும், குளிர்ச்சியூட்டவும் இந்த மழை காரணமானாலும்,…
2.75 கோடி பேர் வருகை – வெளிநாட்டினர் கூடுதலாக குவிந்து வருகிறார்கள்! மதுரை:இந்தியாவின் முக்கிய சுற்றுலா நகரங்களில் ஒன்றாக மதுரை…
பல்லாயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் மதுரை டைடல் பார்க் திட்டத்திற்கு உச்சநீதிமன்றம் முத்திரை குத்தியுள்ளது. திட்டத்திற்கெதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு…