மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெறவுள்ள திருக்கல்யாண விழாவில் பங்கேற்க விரும்பும் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்களுக்காக ரூ.500 மற்றும் ரூ.200 கட்டணச் சீட்டுகளுக்கு ஆன்லைன் முன்பதிவு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கோயில் இணை ஆணையர் திரு. ச. கிருஷ்ணன் அறிவித்துள்ளார
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பக்தர்கள் கீழ்க்கண்ட இணையதளங்களில் ரூ.500 மற்றும் ரூ.200 கட்டணச் சீட்டுகளை முன்பதிவு செய்யலாம்:
முன்பதிவு தொடக்கம்: ஏப்ரல் 29
முடிவு: மே 2, இரவு 9 மணி
🔹 ஒருவருக்கு 2 ரூ.500 சீட்டுகள் அல்லது 3 ரூ.200 சீட்டுகள் மட்டுமே முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படுகிறது.
🔹 ஒரே நபர் இரு வகை சீட்டுகளையும் (₹500 மற்றும் ₹200) ஒரே நேரத்தில் பதிவு செய்ய முடியாது.
🔹 ஒரு கைபேசி எண் மட்டும் ஒவ்வொரு பதிவுக்கும் பயன்படுத்த வேண்டும்.
🔹 பாதுகாப்பு காரணமாக சிறுவர் பங்கேற்பதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், கோயிலின் மேற்கு சித்திரை வீதியில் உள்ள பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில், காலை 10 முதல் மாலை 6 மணி வரை, கோயில் ஊழியர்கள் மூலம் நேரடி முன்பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மொத்தம் கிடைக்கக்கூடிய சீட்டுகளின் எண்ணிக்கையை விட அதிக விண்ணப்பங்கள் வந்தால், குலுக்கல் முறையில் மே 3 ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டு குறுந்தகவல் அனுப்பப்படும்.
சீட்டு பெற்றுக்கொள்வதற்கான நாள்:
மே 4 முதல் மே 6 வரை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, பிர்லா விஷ்ரம் மையத்தில் குறுந்தகவல் காண்பித்து சீட்டு பெறலாம்.
மொய் காணிக்கையை செலுத்த விரும்பும் பக்தர்கள், மேலுள்ள இணையதளங்கள் வழியாக ஆன்லைனில் செலுத்தலாம்.
📌 முக்கிய குறிப்பு: திருக்கல்யாண நாளன்று, கட்டணச் சீட்டுகள் பெற்ற பக்தர்கள் அதிகாலை 5 மணி முதல் 7 மணிக்குள் கோயிலில் வந்து சேர வேண்டும்.
மேலும் தகவலுக்கு:
https://hrce.tn.gov.in
https://maduraimeenakshi.hrce.tn.gov.in
மதுரையில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி…
பெண்களை அதிகமாக பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில், 14 வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கான ஹெச்பிவி (HPV)…
தமிழகத்தில் இன்று (மார்ச் 3) பிற்பகல் 3:20 மணி முதல் மாலை 6:47 மணி வரை நிகழவுள்ள 2026 ஆம்…
மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. கடந்த…
பிரதமர் நாளை மாலை மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதை முன்னிட்டு, நகரம்…
காவல் துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படாதது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேர்வு முடிவுகளை…