மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்ததாக பரவிய செய்திகளுக்கு பதிலளித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன்,
“திட்டங்கள் நிராகரிக்கப்படவில்லை; மத்திய அரசு கூடுதல் தகவல்களை மட்டுமே கேட்டுள்ளது”
என்று தெளிவுபடுத்தினார்.
கோவையில் நடைபெற்ற இயற்கை வேளாண்மை மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைக்கும் முன், அவரை வரவேற்க கோவை விமான நிலையம் வந்த தமிழிசை செளந்தரராஜன், செய்தியாளர்களிடம் பேசியபோது:
“தமிழக விவசாயிகளுக்காக பல திட்டங்களை பிரதமர் மோடி அறிவித்து வருகிறார். ஆனால், முதல்வர் மு.க. ஸ்டாலின் உதவிக்காக கடிதங்கள் எழுதிக் கொண்டிருக்கிறார்.
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரிக்கவில்லை. விரிவான ஆவணங்கள் மற்றும் கூடுதல் தொழில்நுட்ப விவரங்களையே கேட்டு இருக்கிறது.
தமிழ்நாட்டுக்குத்தான் நாட்டிலேயே அதிகமான வந்தே பாரத் ரயில்கள் வழங்கப்பட்டுள்ளன. அப்படி இருக்கும்போது, மத்திய அரசு மெட்ரோ திட்டத்தை கொடுக்காதா?
திட்டங்களுக்கு தேவையான வசதிகள் உள்ளதா என்பதைப் பார்த்துதான் அனுமதி வழங்கப்படும்.
மெட்ரோ விவகாரத்தில் மக்களிடம் அவநம்பிக்கை உருவானதற்கு மாநில அரசுதான் காரணம்.
இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பு ஏற்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டார்.
மதுரையில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி…
பெண்களை அதிகமாக பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில், 14 வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கான ஹெச்பிவி (HPV)…
தமிழகத்தில் இன்று (மார்ச் 3) பிற்பகல் 3:20 மணி முதல் மாலை 6:47 மணி வரை நிகழவுள்ள 2026 ஆம்…
மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. கடந்த…
பிரதமர் நாளை மாலை மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதை முன்னிட்டு, நகரம்…
காவல் துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படாதது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேர்வு முடிவுகளை…