ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், Indian Railways நாடு முழுவதும் பயணக் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு டிசம்பர் 26, 2025 முதல் அமலுக்கு வரவுள்ளது.
எரிபொருள் விலை உயர்வு மற்றும் பராமரிப்புச் செலவுகளை ஈடுகட்டும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது, குறிப்பாக நடுத்தர வர்க்க மற்றும் தினசரி பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ரயில்வே அமைச்சகத்தின் அறிவிப்பின்படி:
இருப்பினும்,
ஆகியோருக்கு இந்த கட்டண உயர்வு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தூரங்களுக்கு:
இதற்கு மேலாக, GST, முன்பதிவு கட்டணம் உள்ளிட்டவை வழக்கம்போல் வசூலிக்கப்படும், இதனால் மொத்த டிக்கெட் விலையில் சிறிய அளவில் மேலும் மாற்றம் ஏற்படும்.
இந்த கட்டண உயர்வு மூலம், மார்ச் 2026க்குள் சுமார் ₹600 கோடி கூடுதல் வருவாய் ஈட்ட ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜூலை மாதம் ஏற்கனவே ஒரு முறை கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் உயர்வு அறிவிக்கப்பட்டிருப்பது பயணிகளிடையே பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.
பண்டிகை காலங்களில் சொந்த ஊர் செல்ல திட்டமிடும் மக்களுக்கு, இந்த விலை உயர்வு கூடுதல் பொருளாதார சுமையாகவே பார்க்கப்படுகிறது.
மதுரையில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி…
பெண்களை அதிகமாக பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில், 14 வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கான ஹெச்பிவி (HPV)…
தமிழகத்தில் இன்று (மார்ச் 3) பிற்பகல் 3:20 மணி முதல் மாலை 6:47 மணி வரை நிகழவுள்ள 2026 ஆம்…
மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. கடந்த…
பிரதமர் நாளை மாலை மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதை முன்னிட்டு, நகரம்…
காவல் துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படாதது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேர்வு முடிவுகளை…