வரும் ஏப்ரல் 29ஆம் தேதி தொடங்க உள்ள சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, மதுரை மாநகராட்சிப் பகுதியில் நடைபெற்று வரும் முன்னேற்பாட்டு பணிகளை மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளாக திக்கு விஜயம், திருக்கல்யாணம் மற்றும் தேரோட்டம் இடம்பெற உள்ளன. இத்துடன் அழகா் கோயிலில் நடைபெறும் 10 நாள் சித்திரை விழாவின் ஒரு பகுதியாக, கள்ளழகா் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவமும் நடைபெறுகிறது.
இந்த விழாவில் தமிழகம் முழுவதும் மற்றும் வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டுவருவார்கள். இதனை முன்னிட்டு, கள்ளழகா் மதுரை மாநகருக்கு வருகை தரும் வழியிலுள்ள பகுதிகள் — அழகா் கோயில் பிரதான சாலை, கடச்சனேந்தல், மூன்று மாவடி, சா்வேயா் காலனி, புதூர், தல்லாகுளம், ஆழ்வார்புரம் வைகை ஆற்றுப் பகுதி, நான்கு சித்திரை வீதிகள் மற்றும் தேரோட்டம் நடைபெறும் நான்கு மாசி வீதிகள் — இவற்றில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுவருகின்றன.
மாநகராட்சியின் சார்பில், குடிநீர், கழிப்பறை வசதிகள், மின்விளக்கு பொருத்துதல், சாலைகள் சீரமைத்தல், தூய்மை பணிகள், மரத்தடுப்புகள் அமைத்தல் போன்ற பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஆய்வின்போது மாநகராட்சி கண்காணிப்புப் பொறியாளர் முகம்மது சபியுல்லா, துணை ஆணையா் ஜெய்னுலாபுதீன், நகர் நல அலுவலா் இந்திரா, குடிநீர் செயற்பொறியாளா் பாக்கியலட்சுமி, மற்றும் பிற பொறியாளா்கள், சுகாதார அலுவலா்கள், ஆய்வாளா்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் செப்டம்பர் 16 மற்றும் 17 ஆகிய இரண்டு…
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகத்தை நேரில் காண விரும்பும் பக்தர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளது. கோயில் நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ…
மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, செப்டம்பர் 16-ம் தேதி இரவு 10 மணி முதல் செப்டம்பர் 17-ம்…
விநாயகர் சதுர்த்தி மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதலாக 5,400…
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய் மாமன்’ தங்க மோதிரம் திட்டத்தின் தொடக்க…
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் மாதத்தில் இயக்கப்படும் விரைவு ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மூன்றாவது…