சமீபத்திய

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் அருகே உழவர் சடங்கோடு விவசாயிகள் தமிழ் புத்தாண்டைக் கொண்டாடினர்.

திருப்பரங்குன்றம்: தமிழ் புத்தாண்டையும் சித்திரை மாதத்தையும் முன்னிட்டு திருப்பரங்குன்றம் முருகன் கோயில் நிலத்தில், விவசாயிகள் பாரம்பரிய முறையில் பொன்னேர் உழுதனர்.

குரோதி வருடம் முடிந்து, விசுவாசுவ வருடம் பிறந்ததை ஒட்டி நேற்று திருப்பரங்குன்றம் பகுதியில் 7 கண்மாய்களுக்கு சார்ந்த விவசாயிகள் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர். கோயில் முன்பு பூச்சூடிய தார்க்குச்சிகளை வைத்து வழிபாட்டை மேற்கொண்டு, அதனை கையில் ஏந்தியவாறு கிரிவலமாகச் சென்று, மலைக்கு பின்புறம் உள்ள கோயில் நிலங்களுக்குச் சென்றனர்.

அங்கு, 8 மாடுகள் பூட்டிய நான்கு ஏர் கலப்பைகளைக் கொண்டு, பாரம்பரிய பொன்னேர் உழுதல் முறையில் நிலத்தை உழுது, புதிய அறுவடைக்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கக்கூடிய விவசாயப் பணிகளை ஆரம்பித்தனர்.

பின்னர், திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறமுள்ள கல்வெட்டு குகைக் கோயில் வளாகத்தில் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிகழ்வில் பானாங்குளம், செவ்வந்திகுளம், ஆரியன்குளம், தென்கால், சேமட்டான், குறுக்கிட்டான், சூறாவளிக்குளம் உள்ளிட்ட 7 கண்மாய்களின் விவசாயிகள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வு, விவசாய மரபுகளின் முக்கியத்துவத்தையும், தமிழர் பண்பாட்டு விழாவாகிய தமிழ் புத்தாண்டின் ஆழ்ந்த சமுதாயப் பிணைப்பையும் பிரதிபலிக்கிறது.

Thoonganagaram Admin

Recent Posts

2026 மதுரை சித்திரை திருவிழா முழு அட்டவணை வெளியீடு

மதுரையில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி…

3 நாட்கள் ago

பெண்களை காக்க மதுரையில் புதிய சுகாதார திட்டம்

பெண்களை அதிகமாக பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில், 14 வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கான ஹெச்பிவி (HPV)…

4 நாட்கள் ago

பக்தர்கள் கவனம் சந்திர கிரகணம் காரணமாக கோயில்கள் இன்று நடை அடைப்பு

தமிழகத்தில் இன்று (மார்ச் 3) பிற்பகல் 3:20 மணி முதல் மாலை 6:47 மணி வரை நிகழவுள்ள 2026 ஆம்…

5 நாட்கள் ago

மாசித் திருவிழா தேரோட்டம் கோலாகலம்

மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. கடந்த…

6 நாட்கள் ago

பிரதமரின் வருகையையொட்டி மதுரையில் நாளை போக்குவரத்து மாற்றம்

பிரதமர் நாளை மாலை மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதை முன்னிட்டு, நகரம்…

1 வாரம் ago

இரண்டரை மாதத்தில் அரசு வேலை இபிஎஸ் உறுதி

காவல் துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படாதது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேர்வு முடிவுகளை…

1 வாரம் ago