மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் மேம்பாலம் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, விமானநிலையச் சாலையில் தூசு பறப்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிபடுகின்றனர்.
திருமங்கலம் காமராஜபுரத்தில் இருந்து வேளாண்மை விரிவாக்க மையம் வரை, தேவர் சிலை அருகே தொடங்கி மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சர்வீஸ் சாலைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. பணியின் போது சாலையில் இருந்த தார் அகற்றப்பட்டதால், சாலை குண்டும் குழியுமாக மாறியுள்ளது.
லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் தொடர்ந்து செல்வதால் தூசு கிளம்பி பரவுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மட்டுமல்ல, காமராஜபுரம் மற்றும் கற்பகநகர் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும் தூசி மண்டலத்தால் அலர்ஜி, மூச்சுத்திணறல் மற்றும் ஆஸ்துமா போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர்.
பொதுமக்கள், மேம்பாலப் பணிகளை விரைவில் முடிக்கவும், தூசி பரவாமல் நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரையில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி…
பெண்களை அதிகமாக பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில், 14 வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கான ஹெச்பிவி (HPV)…
தமிழகத்தில் இன்று (மார்ச் 3) பிற்பகல் 3:20 மணி முதல் மாலை 6:47 மணி வரை நிகழவுள்ள 2026 ஆம்…
மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. கடந்த…
பிரதமர் நாளை மாலை மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதை முன்னிட்டு, நகரம்…
காவல் துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படாதது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேர்வு முடிவுகளை…