தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க குணச்சித்திர நடிகரான இலைக்கடை முருகன், இன்று மாரடைப்பால் காலமானார். ‘சுப்ரமணியபுரம்’ திரைப்படத்தில் மொக்கைச்சாமி எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ்பெற்றவர். அவருக்கு வயது 78.
மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் இலைக்கடை நடத்தி வந்த முருகனை, இயக்குநர் சசிகுமார் தனது படத்திற்கான லொக்கேஷன் தேடிச் சென்றபோது கவனித்தார். முருகனின் இயல்பான தோற்றம், செயல்பாடுகள் போன்றவை சினிமாவுக்கு பொருத்தமுள்ளதாகத் தெரிந்ததால், அவரை ‘மொக்கைச்சாமி’ கதாபாத்திரத்திற்கு தேர்ந்தெடுத்தார்.
இந்தப் படம், தமிழ் சினிமாவில் ஒரு மைல்கல்லாக அமைந்ததுடன், இயக்குநர் சசிகுமாருக்கும், நடிகர் ஜெய்க்கும் முக்கியமான திருப்புமுனையாக இருந்தது.
‘சுப்ரமணியபுரம்’ உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த பிறகு, முருகன் மீண்டும் தனது இயல்பு தொழிலான இலைக்கடை வியாபாரத்திற்குத் திரும்பினார். எளிமையை தவறாத அவரின் வாழ்க்கைபாங்கு, சினிமா ரசிகர்களிடையே பெருமைபெற்றது.
இன்று மாரடைப்பால் காலமான அவரின் மறைவு, தமிழ் சினிமாவுக்கும், அவரது ரசிகர்களுக்கும் பெரும் இழப்பாகக் கருதப்படுகிறது.
‘மொக்கைச்சாமி’ என்ற கதாபாத்திரம் மூலம் அவர் வெளிப்படுத்திய இயற்கை நடிப்பு, தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு உண்மையான சின்னமாகவே நிலவுகிறது.
மதுரை சித்திரை திருவிழாவின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21, 2026) கோலாகலமாக நடைபெற்றன. காலை மற்றும் இரவு…
சித்திரை திருவிழாவின் இரண்டாம் நாளான ஏப்ரல் 20, 2026 திங்கட்கிழமை, காலை 7 மணியளவில் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளிய இறைவன் நான்கு…
மதுரை நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழாவின் முதல் நாள் நிகழ்வுகள் நேற்று (ஏப்ரல் 19, 2026, ஞாயிற்றுக்கிழமை) வெற்றிகரமாக…
மதுரையில் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற கட்டட திறப்பு விழாவை முன்னிட்டு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் வருகையால் நாளை நகரில்…
நேரலை கண்காணிப்பு · 19–29 ஏப்ரல் 2026 📍 இணையதளம் மூலம் கண்காணிக்க இங்கே கிளிக் செய்யவும் Track Meenakshi…
நேரலை கண்காணிப்பு · 29 ஏப்ரல் – 6 மே 2026 📍 இணையதளம் மூலம் கண்காணிக்க இங்கே கிளிக்…