சமீபத்திய

விஜய் வருகையால் அரசியல் பரபரப்பு – நயினார் நாகேந்திரன் திமுகவுக்கு சவால்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பல முக்கிய அரசியல் மற்றும் சமூக விவகாரங்கள் குறித்து தனது கருத்துகளை தெரிவித்தார்.

முதலில், பாஜக மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி அவர்களின் மகளின் மரணம் குறித்து தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். அதேபோல், பெங்களூரில் நடைபெற்ற ஐபிஎல் வெற்றி விழாவில் கூட்ட நெரிசலால் ஏற்பட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்த அவர், இந்த பரிதாபகரமான நிகழ்வுக்கு கர்நாடக அரசின் ஏற்பாடுகள் இல்லை என்பதே காரணம் என விமர்சித்தார்.

“மகாராஷ்டிராவில் பாஜக அரசு இருந்தபோது இத்தகைய விழாக்கள் சிறப்பாக நடத்தப்பட்டன. ஆனால் கர்நாடகாவில் சரியான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை,” என்றார் அவர்.

தமிழக அரசின் செயற்பாடுகள் குறித்தும் கடும் விமர்சனம் மேற்கொண்ட நகேந்திரன், “திமுக அரசு விவசாயிகளை வஞ்சிக்கிறது. சட்டம் ஒழுங்கு சீர்கேடாக உள்ளது. மீதமுள்ள ஆட்சிக் காலத்துக்குள் விவசாயிகள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்,” என்று எச்சரிக்கை விடுத்தார்.

பாமகவில் உள்ள உட்கட்சி பிரச்சனைகள் குறித்து கூறும் போது, “குருமூர்த்தி, சைதை துரைசாமி உள்ளிட்டோர் செலுத்தும் நிலைகள் அவர்களது தனிப்பட்டவை. பாஜகவிற்கு அதனுடன் தொடர்பில்லை,” எனக் குறிப்பிட்டார்.

சமீபத்தில் சிவகிரியில் கைது செய்யப்பட்ட 19 பேரின் வாக்குமூலம் குறித்து அவர்,

“அவர்கள் 19 கொலைகள் செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனால், ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்கள் நிரபராதிகளா என்ற சந்தேகம் எழுகிறது,” என்றார்.

மதுரை சென்றுவர உள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து பேசும் போது,

“அவர் மதுரையில் கால் பதிக்க வருகிறார். முருக பக்தர் மாநாட்டில் ஒலிக்கும் குரல், சென்ஜார்ஜ் கோட்டையில் எதிரொலிக்கும்,” எனத் திமுக அரசிற்கு எதிராக திடமான அரசியல் குறியீடு கொடுத்தார்.

அத்துடன்,

முருக பக்தர் மாநாட்டுக்கு நடிகர் விஜய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து திமுக அரசை தோற்கடிக்க வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு,” என கூட்டணிக் காட்சியையும் ஊக்குவிக்கும் வகையில் பேசியார்.

குறிப்பு: விஜயின் மாநாட்டு வருகை, எதிர்காலத்தில் அவர் அரசியலில் எவ்வாறு செயல்படப்போகிறார் என்பதைப் பற்றி முக்கியமான அரசியல் முன்மெழுச்சியை ஏற்படுத்தும் என அரசியல் வட்டாரத்தில் கருதப்படுகிறது.

Thoonganagaram Admin

Recent Posts

மாசி வீதிகள் முழுவதும் பக்தர்கள் – கைலாச காட்சியில் திருவிழா களைகட்டியத்து

மதுரை சித்திரை திருவிழாவின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21, 2026) கோலாகலமாக நடைபெற்றன. காலை மற்றும் இரவு…

11 மணி நேரங்கள் ago

சித்திரை விழா இரண்டாம் நாள் வெகு சிறப்பு

சித்திரை திருவிழாவின் இரண்டாம் நாளான ஏப்ரல் 20, 2026 திங்கட்கிழமை, காலை 7 மணியளவில் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளிய இறைவன் நான்கு…

1 நாள் ago

கொடியேற்றம், சிம்ஹாசனம், வாகன சேவை–முதல் நாள் கோலாகலம்

மதுரை நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழாவின் முதல் நாள் நிகழ்வுகள் நேற்று (ஏப்ரல் 19, 2026, ஞாயிற்றுக்கிழமை) வெற்றிகரமாக…

2 நாட்கள் ago

மதுரையில் நாளை போக்குவரத்து மாற்றம்

மதுரையில் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற கட்டட திறப்பு விழாவை முன்னிட்டு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் வருகையால் நாளை நகரில்…

4 நாட்கள் ago

Track Meenakshi Amman – மதுரை சித்திரை திருவிழா 2026 | மீனாட்சி அம்மன் & சுந்தரேஸ்வரர் வீதி உலா Live Tracking

நேரலை கண்காணிப்பு · 19–29 ஏப்ரல் 2026 📍 இணையதளம் மூலம் கண்காணிக்க இங்கே கிளிக் செய்யவும் Track Meenakshi…

5 நாட்கள் ago

Track Alagar | மதுரை சித்திரை திருவிழா 2026 – கள்ளழகர் இருக்கும் இடம் Live Tracking

நேரலை கண்காணிப்பு · 29 ஏப்ரல் – 6 மே 2026 📍 இணையதளம் மூலம் கண்காணிக்க இங்கே கிளிக்…

5 நாட்கள் ago