மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிய இணைப்பு பாலம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மதுரை மாநகராட்சி மண்டலம்–1, வார்டு எண் 8-க்கு உட்பட்ட அல்-அமீன் நகர் பிரதான சாலை – அழகர்கோவில் மெயின் ரோடு இணைப்பாக புதிய பாலம் அமைக்கப்படவுள்ளது. இந்த திட்டத்திற்கான பூமி பூஜை இன்று (14.12.2025) நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன் முன்னிலை வகித்தார்.
மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளிலும் புதிய தார் சாலைகள், பேவர் பிளாக் சாலைகள், குடிநீர் திட்டப் பணிகள், மழைநீர் வடிகால் அமைப்புகள், பாதாள சாக்கடை திட்டம், தெருவிளக்கு பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, வார்டு எண் 8-ல் உள்ள அல்-அமீன் நகர் பகுதியில் பொதுமக்கள் போக்குவரத்து சிரமமின்றி எளிதாக பயணிக்க வசதியாக இந்த புதிய இணைப்பு பாலம் திட்டமிடப்பட்டுள்ளது.
கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் இந்த பாலம் கட்டப்படவுள்ள நிலையில், பூமி பூஜை நடைபெற்று கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வில் உதவி ஆணையாளர் ரவிக்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி செயற் பொறியாளர் ஆரோக்கிய சேவியர், உதவி பொறியாளர் முருகன், மாமன்ற உறுப்பினர்கள் ராதிகா கௌரிசங்கர், முத்துக்குமாரி, மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
மதுரையில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி…
பெண்களை அதிகமாக பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில், 14 வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கான ஹெச்பிவி (HPV)…
தமிழகத்தில் இன்று (மார்ச் 3) பிற்பகல் 3:20 மணி முதல் மாலை 6:47 மணி வரை நிகழவுள்ள 2026 ஆம்…
மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. கடந்த…
பிரதமர் நாளை மாலை மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதை முன்னிட்டு, நகரம்…
காவல் துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படாதது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேர்வு முடிவுகளை…