தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிர்வலை ஏற்படுத்தும் வகையில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், திமுகவின் முக்கியத் தொகுதிகளில் ஒன்றான மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு அதிகரித்து வருகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் ஐந்து மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், தேமுதிக இன்னும் தனது கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்காமல் இருக்கிறது.
சமீபத்தில் நடைபெற்ற தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்,
“ஜனவரி மாதத்தில் கடலூர் மாநாட்டின் போது கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியாகும்,”
என்று தெரிவித்துள்ளார்.
அதே சமயம், “அதற்கு முன்போ அல்லது அதன் பிறகோ கூட்டணி அறிவிப்பு வெளிவரும்” என கூறியதால், அரசியல் வட்டாரத்தில் சஸ்பென்ஸ் நிலவுகிறது.
திமுக அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தற்போது பிரதிநிதித்துவம் செய்கிற மதுரை மத்திய தொகுதியில், தேமுதிக தொண்டர்கள் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
அவரது தலைமையில் மதுரையில் நடைபெற்ற தேமுதிக பூத் முகவர்கள் கூட்டத்தில்,
“பிரேமலதா விஜயகாந்த் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட வேண்டும்”
என்கிற தீர்மானம் அதிகாரப்பூர்வமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த முடிவு, மதுரை மாவட்ட அரசியல் தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தேமுதிக, எந்தக் கட்சியுடனும் கூட்டணி செய்யலாம் என்ற திறந்த மனநிலையுடன் இருக்கிறது.
ஜனவரி மாநாட்டில் அனைத்துத் தீர்மானங்களும் வெளியாகும்.
மக்கள் விருப்பம் மற்றும் கட்சி தொண்டர்களின் கோரிக்கையை மதித்து முடிவெடுக்கப்படும்.”
மதுரை மத்திய தொகுதி போட்டி,
மதுரையில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி…
பெண்களை அதிகமாக பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில், 14 வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கான ஹெச்பிவி (HPV)…
தமிழகத்தில் இன்று (மார்ச் 3) பிற்பகல் 3:20 மணி முதல் மாலை 6:47 மணி வரை நிகழவுள்ள 2026 ஆம்…
மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. கடந்த…
பிரதமர் நாளை மாலை மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதை முன்னிட்டு, நகரம்…
காவல் துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படாதது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேர்வு முடிவுகளை…