தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக புதிய அரசியல் கட்சி தவெக தலைவர் விஜய், மதுரையில் நடைபெற்ற தலைமை மாநாட்டில் ஆவேசமான உரையாற்றினார். மாநில அரசியலின் எதிர்காலத்தை மாற்றப்போகும் வகையில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தன் முடிவுகளை வெளிப்படையாக அறிவித்தார்.
“பாஜக கொள்கை எதிரி, திமுக அரசியல் எதிரி. இந்த தேர்தலில் போட்டி எங்களுக்கும் திமுகவுக்கும் தான். பாஜகவின் எண்ணங்கள் தமிழகத்தில் எடுபடாது,” எனக் கூறி, மத்திய அரசின் நயவஞ்சக அணுகுமுறைகளைக் கடுமையாக விமர்சித்தார்.
“பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தது மக்களுக்கு நல்லதா? இல்லையா இஸ்லாமிய மக்களுக்கு சதியா? அடிமை கூட்டணியில் நான் ஒருபோதும் சேரமாட்டேன்” எனப் பதறவைக்கும் வகையில் பேசிய அவர், தனிக் கட்சி எனும் தன்மையுடன் தன்னிச்சையான அரசியலை முன்னெடுப்பதை உறுதிப்படுத்தினார்.
“நீங்கள் எனக்கு கடவுள் கொடுத்த வரம். 30 ஆண்டுகளாக என்னை தாங்கி பிடிச்சு வர்றீங்க. என் மக்களை நான் எப்படி மறப்பேன்?” என்ற அவரது உரை, கூட்டத்தில் கண்கள் கலங்கச் செய்தது. அவரது நன்றிக்கடனை அரசியலாக மாற்ற முடிவு செய்ததாகத் தெரிவித்தார்.
விழா மேடையில் மிகுந்த பரபரப்புக்கு இடையே, 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என அறிவித்தார். அதனுடன், “மதுரை கிழக்கு விஜய், மதுரை தெற்கு விஜய், மேலூர் விஜய், சோழவந்தான் விஜய்… 234 தொகுதிகளிலும் நம்ம கட்சி போட்டியிடும். எல்லா இடங்களிலும் ‘நான்’ தான் வேட்பாளர்!” என அவர் கூறியதோடு, ரசிகர்களின் கரகோஷம் முழங்கியது.
விஜயின் உரை, தமிழ் அரசியலுக்கு புதிய பரிமாணத்தை ஏற்படுத்துவதாகவும், பாரம்பரிய கட்சிகளுக்கிடையே புதிய சக்தியாக தவெக எழுவதாகவும் புரியவைத்தது. 2026 சட்டமன்றத் தேர்தலில், தமிழ்நாடு அரசியலில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படப்போகும் என அரசியல் நிபுணர்கள் கணிக்கத் தொடங்கியுள்ளனர்.
மதுரையில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி…
பெண்களை அதிகமாக பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில், 14 வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கான ஹெச்பிவி (HPV)…
தமிழகத்தில் இன்று (மார்ச் 3) பிற்பகல் 3:20 மணி முதல் மாலை 6:47 மணி வரை நிகழவுள்ள 2026 ஆம்…
மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. கடந்த…
பிரதமர் நாளை மாலை மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதை முன்னிட்டு, நகரம்…
காவல் துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படாதது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேர்வு முடிவுகளை…