மதுரை உலகப் புகழ்பெற்ற மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் தெப்பத் திருவிழாவின் கொடியேற்றம் புதன்கிழமை (ஜனவரி 21) நடைபெறுகிறது.
ஆண்டுதோறும் தை மாதம் பௌர்ணமி நாளில் நடைபெறும் தெப்பத் திருவிழா, நிகழாண்டில் ஜனவரி 21ஆம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் காலை 10.05 மணிக்குமேல் 10.29 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற உள்ளது.
இதனைத் தொடர்ந்து, திருவிழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை இரு வேளைகளிலும் மீனாட்சி சுந்தரேசுவரர் பஞ்சமூர்த்திகளுடன் நான்கு சித்திரை வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வுகள்:
முக்கிய தெப்பத் திருவிழா பிப்ரவரி 1ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் அதிகாலை, சுவாமி பிரியாவிடையுடனும் அம்மன் தனியாகவும் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி வண்டியூர் தெப்பக்குளம் முன்புள்ள முக்தீஸ்வரர் கோயிலுக்கு எழுந்தருளுகின்றனர்.
அங்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகளுக்குப் பிறகு, தெப்பக்குளத்தில் அமைக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமியும் அம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். தெப்பம் முற்பகலில் இரண்டு முறையும், இரவில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் ஒரு முறையும் சுற்றி வலம் வரும். பின்னர் நள்ளிரவில் மீண்டும் கோயிலுக்கு எழுந்தருள்வார்கள்.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி தியாகராஜன், கோயில் இணை ஆணையர் நா. சுரேஷ் மற்றும் அறங்காவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரையில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி…
பெண்களை அதிகமாக பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில், 14 வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கான ஹெச்பிவி (HPV)…
தமிழகத்தில் இன்று (மார்ச் 3) பிற்பகல் 3:20 மணி முதல் மாலை 6:47 மணி வரை நிகழவுள்ள 2026 ஆம்…
மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. கடந்த…
பிரதமர் நாளை மாலை மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதை முன்னிட்டு, நகரம்…
காவல் துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படாதது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேர்வு முடிவுகளை…