சமீபத்திய

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 118-வது ஜெயந்தி – 2 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் 118-வது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, கோரிப்பாளையம் சந்திப்பில் உள்ள தேவர் சிலைக்கு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் மரியாதை செலுத்த உள்ளனர்.

இதனை முன்னிட்டு, இன்று (அக்டோபர் 29) மற்றும் நாளை (அக்டோபர் 30) ஆகிய இரு நாட்களிலும், கோரிப்பாளையம் சந்திப்பு வழியாக செல்லும் அனைத்து வாகன போக்குவரத்தும் தடைசெய்யப்பட்டுள்ளது.

மதுரை மாநகர காவல் துறை தெரிவித்ததாவது:
பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் சிரமமின்றி செல்வதற்காக தற்காலிக போக்குவரத்து மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


🚗 வாகன அனுமதி இல்லை

தேவர் ஜெயந்தி விழாவுக்கான வாகனங்களைத் தவிர,
மற்ற வாகனங்களுக்கு கீழ்க்கண்ட சாலைகள் வழியாக கோரிப்பாளையம் செல்ல அனுமதி இல்லை:

  • எம்.எம். லாட்ஜ் சந்திப்பு
  • தமுக்கம் சந்திப்பு
  • சிவசண்முகம் பிள்ளை சாலை சந்திப்பு
  • மீனாட்சி கல்லூரி தரைப்பாலம் சந்திப்பு

🚛 கனரக வாகனங்களுக்கு தடை

  • இன்று மற்றும் நாளை: காலை 6.00 மணி முதல் இரவு 10.30 மணி வரை
  • லாரிகள் மற்றும் கனரக சரக்கு வாகனங்கள் நகருக்குள் நுழைய தடை.
  • இவ்வாகனங்கள் சுற்றுச் சாலை வழியாகச் செல்ல வேண்டும்.

விலக்கு:

  • தத்தனேரி மெயின் ரோடு, தமுக்கம் மற்றும் வள்ளுவர் சிலை சந்திப்பிலிருந்து வரும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் வழக்கம்போல செல்லலாம்.
  • பசும்பொன்னிற்கு செல்லும் வாகனங்கள் நகருக்குள் நுழையாமல் சுற்றுச் சாலை வழியாகவே செல்ல வேண்டும்.

🛵 வாகன ஓட்டிகள் கவனத்திற்கு

மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் → பெரியார் / ஆரப்பாளையம் செல்ல:

  • கே.கே. நகர் ஆர்ச் → ஆவின் சந்திப்பு → A1 பார் சந்திப்பு → வைகை வடகரை சாலை → ஓபுளா படித்துறை பாலம் → வைகை தென்கரை சாலை → யானைக்கல் வழியாக செல்லலாம்.

பெரியார் பேருந்து நிலையம் → யானைக்கல் / புதுப்பாலம் / நத்தம் / அழகர்கோவில் / மேலூர் சாலைகள்:

  • வழக்கமான பாதைகளில் செல்லலாம்.

ஆரப்பாளையம் / பாத்திமா கல்லூரி → நத்தம் / அழகர்கோவில் / மேலூர் / பனகல் சாலை:

  • செல்லூர் கபடி ரவுண்டானா → எம்.எம். லாட்ஜ் சந்திப்பு வழியாக செல்லலாம்,
    அல்லது ரவுண்டானாவில் வலதுபுறம் திரும்பி வைகை வடகரை சாலை வழியாக செல்லலாம்.

🚨 மதுரை காவல்துறை வலியுறுத்தல்

தற்காலிக போக்குவரத்து மாற்றத்திற்காக பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் ஒத்துழைப்பு வழங்குமாறு மதுரை மாநகர காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Thoonganagaram Admin

Recent Posts

2026 மதுரை சித்திரை திருவிழா முழு அட்டவணை வெளியீடு

மதுரையில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி…

3 நாட்கள் ago

பெண்களை காக்க மதுரையில் புதிய சுகாதார திட்டம்

பெண்களை அதிகமாக பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில், 14 வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கான ஹெச்பிவி (HPV)…

4 நாட்கள் ago

பக்தர்கள் கவனம் சந்திர கிரகணம் காரணமாக கோயில்கள் இன்று நடை அடைப்பு

தமிழகத்தில் இன்று (மார்ச் 3) பிற்பகல் 3:20 மணி முதல் மாலை 6:47 மணி வரை நிகழவுள்ள 2026 ஆம்…

5 நாட்கள் ago

மாசித் திருவிழா தேரோட்டம் கோலாகலம்

மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. கடந்த…

6 நாட்கள் ago

பிரதமரின் வருகையையொட்டி மதுரையில் நாளை போக்குவரத்து மாற்றம்

பிரதமர் நாளை மாலை மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதை முன்னிட்டு, நகரம்…

1 வாரம் ago

இரண்டரை மாதத்தில் அரசு வேலை இபிஎஸ் உறுதி

காவல் துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படாதது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேர்வு முடிவுகளை…

1 வாரம் ago