2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் வியூகங்களை தீவிரமாக அமைத்து வருகின்றன. ஆளும் திமுக சாதனைகளை முன்வைத்து தேர்தல் பணியை தொடங்கியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளும் பிரச்சினைகளை முன்னிறுத்தி மக்களை அணுகி வருகின்றன.
இந்த அரசியல் சூழலில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மக்களுக்கு தங்களை பிரம்மாண்டமாக அறிமுகப்படுத்தும் வகையில் தென் மாவட்டங்களை மையமாகக் கொண்டு மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்கான இடத் தேர்வு பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மாநாடு மதுரையில்?
தென் மாவட்டங்களில் கட்சி ஆதரவை பெருக்கும் நோக்கில் மாநாடு மதுரையில் நடத்தும் திட்டம் உருவாகியுள்ளது. இதற்காக, விஜய்யின் அறிவுறுத்தலின் பேரில் 6 பேர் கொண்ட குழு இன்று மதுரைக்கு வந்துள்ளது. மதுரை ரிங்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இடங்களை அவர்கள் நேரில் பார்வையிட்டுள்ளனர்.
மாநாடு வெடித்தெழும் செயல்திட்டம்:
ஒரு தவெக நிர்வாகி கூறுகையில்,
“தென்மாவட்டங்களை மையமாகக் கொண்டு பிரம்மாண்ட மாநாடு நடத்தக் கட்சித் தலைவர் விஜயிடம் பரிந்துரைத்தோம். தேர்தலுக்கு முன் இதுபோன்ற மாநாடு கட்சிக்கு எழுச்சி அளிக்கும். தலைவர் திட்டத்துக்கேற்ப, பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத இடத்தை தேர்வு செய்ய முயற்சி செய்கிறோம்,” என்றார்.
இடத் தேடலில் உள்ளூர் நிர்வாகிகளும், சென்னையில் இருந்து வந்த உறுப்பினர்களும் இணைந்து ஓரிரு நாளில் இடம் இறுதியாக தேர்வு செய்யவுள்ளதாக தெரிகிறது.
மாநாடு – அரசியல் ரீதியாக முக்கியமான நிகழ்வாகும்:
முன்னதாக, திமுக, பாஜக, இந்து முன்னணி, மனித நேய மக்கள் கட்சி, நாம் தமிழர் கட்சி ஆகியவைகளும் வெவ்வேறு பெயர்களில் மதுரையில் மாநாடுகளை நடத்தியுள்ளன. இந்தத் தொடரில் தான் தவெகவும் தங்கள் முதல் பெரிய அரசியல் நிகழ்வை நடத்த திட்டமிட்டுள்ளது.
தகவல்:
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் மகா கும்பாபிஷேக விழாவுக்கான பூர்வாங்க பூஜைகள் நாளை தொடங்கி செப்டம்பர் 11…
மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள இஸ்கான் ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண பலராமர் திருக்கோவிலில் இன்று, செப்டம்பர் 4, 2026 அன்று,…
மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், காப்பாளர்கள் மற்றும்…
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர், கோவில் நிர்வாகம்செப்டம்பர் 11 முதல் 16 வரை மூலவர் தரிசனம்…
ஜல்லிக்கட்டு குறித்து தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா சட்டப்பேரவையில் தெரிவித்த கருத்துகளைக் கண்டித்தும், தவெக அரசைக் கண்டித்தும் செப்டம்பர் 3-ஆம்…
1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சோலமலை பொறியியல் கல்லூரி, தரமான தொழில்நுட்ப மற்றும் மேலாண்மைக் கல்வியை வழங்குவதுடன், மாணவர்களின் திறன்…