மதுரை மாநகராட்சி சார்பில் செல்லூர் பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்பில் ‘மல்டி ஸ்போர்ட்ஸ் கிரவுண்ட்’ அமைக்கும் பணிகள் தொடங்கப்படுகின்றன.
செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோடு, கபடி சிலை ரவுண்டானா அருகே ஆக்கிரமிப்பில் இருந்த மாநகராட்சிக்கு சொந்தமான 75 சென்ட் நிலம் மீட்கப்பட்டது. இந்த இடத்தில் விளையாட்டு வீரர்கள் மற்றும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்துடன் இணைந்து நவீன மல்டி ஸ்போர்ட்ஸ் கிரவுண்ட் அமைக்க மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
மாநகராட்சி கமிஷனர் சித்ராவின் முயற்சியினால், மாநகராட்சி கவுன்சிலர்களின் கோரிக்கையை ஏற்று, இந்த திட்டம் தனியார் பங்களிப்புடன் ரூ.50 லட்சம் செலவில் உருவாக்கப்படுகிறது. முதல் கட்டமாக ரூ.5 லட்சம் செலவில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த விளையாட்டு வளாகத்தில் வாலிபால், இறகுப்பந்து, கிரிக்கெட் நெட் பயிற்சி, கோகோ, சிலம்பம், கபடி உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான வசதிகள் அமைக்கப்படுவதுடன், சிறப்பு ஜிம் வசதியும் நடைப்பயிற்சிக்கான டிராக்குகளும் உருவாக்கப்பட உள்ளன.
இந்த முயற்சி செல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளின் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மதுரையில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி…
பெண்களை அதிகமாக பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில், 14 வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கான ஹெச்பிவி (HPV)…
தமிழகத்தில் இன்று (மார்ச் 3) பிற்பகல் 3:20 மணி முதல் மாலை 6:47 மணி வரை நிகழவுள்ள 2026 ஆம்…
மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. கடந்த…
பிரதமர் நாளை மாலை மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதை முன்னிட்டு, நகரம்…
காவல் துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படாதது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேர்வு முடிவுகளை…